விஷம்- ஓ கள்ளே! நீ என்ன மகா கெட்டிக்காரன்போல் பேசுகிறாய், ஒரு கடுகளவு ஒரு மனிதனுக்குள் பிரவேசித்தேனேயானால் உடனே அவன் உயிரை வாங்கி பிணமாக்கிவிடுவேன்.நீ பீப்பாயளவு உள்ளே போனாலும் ஒன்றும் செய்வதில்லை.

கள்ளு:- அப்படியா, உன்னால் என்ன செய்யமுடியும்? ஒரு மனிதன் உயிரை மாத்திரம் தான் வாங்கமுடியும்.இது யாரும் செய்து விடுவார்கள்.என் சங்கதியைக் கேள்.நான் ஒரு மனிதனுக்குள் சென்றேனேயானால் அவன் புத்தி,மானம்,சொத்து இவ்வளவையும் பிடுங்கிக் கொள்வதோடு உயிர் இருக்கவே பிணமாக்கிவிடுவேன். இது உன்னாலாகுமா?

(குடி அரசு - உரையாடல் - 16.08.1925)

Pin It