1. பம்பாய் மாநிலத்தின் பரப்பளவு 12,23,541 சதுர மைல். இதில் (1) மஹாராஷ்டிரா (2) குஜராத் (3) கர்னாடகம் (4) சிந்து என நான்கு மொழிகளைப் பேசும் வட்டாரங்கள் அடங்கி யுள்ளன. இந்தப் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த மக்களும், ஒரே நிர்வாகத்தின் கீழ் நீண்ட காலமாக இருந்து வருகிறார்கள். குஜராத், மஹாராஷ்டிரா, கர்னாடகம் ஆகியவை பம்பாய் மாநிலத்தின் பகுதிகளாகக் கடந்த 110 ஆண்டுகளாக இருந்து வருகின்றன். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து வட்டாரம் இத்துடன் இணைக்கப்பட்டது. இந்த மாநில அமைப்பிலிருந்து தனியே பிரிந்து செல்லக் கர்நாடகமும் சிந்துவும் இப்போது விரும்புகின்றன.

ambedkar 583

இன்றுள்ள பம்பாய் மாநிலம் ஓர் இயல்பான அமைப்பு அல்லவென்றும்,மொழி, இன அடிப்படையில் ஒன்று பட்டதல்லவென்றும், ஒரினத்தன்மைக் கொண்ட பகுதிகளை வேண்டுமென்றே சிதைத்து, பலவகைக் குழுக்களைக் கொண்ட ஒரு வட்டாரத்துடன் இவை வலுக்கட்டாயமாக இணைக்கப் பட்டனவென்றும், கர்னாடகம் மற்றும் சிந்துவின் தரப்பில் விவா திக்கப்படுகிறது, இதனால் பெரும் தீங்கு ஏற்பட்டுள்ளதென்றும், கட்டாயத் துண்டாடல் காரணமாகத் தம்முடைய பண்பாட்டுத் தனித்தன்மைக்குப் பங்கம் ஏற்பட்டுள்ளதென்றும், பெரிய, வேறு இனப் பகுதிகளுடன் தாம் சேர்க்கப்பட்டதால், அரசியல் ரீதியாகத் தாங்கள் கவனிப்பற்றுப் போனதாயும் கர்னாடக, சிந்து வட்டார மக்கள் கூறுகின்றனர்.

 2. கர்னாடகத்தைப் பொறுத்தமட்டில், இந்த வாதம் ஓரளவு சரியென்றே கூறலாம். கர்னாடகம் பல்வேறு சிதறிய பகுதிகளாகத் துண்டிக்கப்பட்டு, நிர்வாக நோக்கங்களுக்காக, கர்னாடகம் அல்லாத பகுதிகளுடன் சேர்க்கப்பட்டது. இதனால் பல சிரமங் கள் ஏற்பட்டன என்பது உண்மை. பம்பாய் மாநிலத்துடன் இனணக்கப்பட்ட பகுதிக்குப் பம்பாய்ச் சட்டமன்றத்தில் போது மான பிரதிநிதித்துவம் அளிக்கப்படாததால், அப்பகுதி அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை. இவையெல்லாம் இருந்தபோதிலும், பம்பாய் மாநிலத்திலிருந்து கர்னாடகத்தைத் தனியாகப் பிரிப்பதை நான் எதிர்க்கிறேன்.

நடை முறையில் மொழிக்கு ஒரு மாநிலம் என்ற கொள்கையைச் செயல் படுத்த முடியாது. இந்தக் கோட்பாட்டை அமல்படுத்தினால், ஏராளமான மாநிலங்களை உருவாக்க வேண்டியிருக்கும்; அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பது என் கருத்து. “கடந்த காலத்தை யும், எதிர்காலத்தையும் கொண்ட, தனிப் பண்புகள் கொண்ட பண்பாட்டு மொழியாக ஒரு மொழி பேசப்படும் வட்டாரங் களிலும்,” “வலுவான மொழி உணர்வு இருக்கும் வட்டாரங் களிலும்” கூட இத்தகைய மாநிலங்களை அமைப்பது நடை முறைக்கு ஒவ்வாதது. கடந்த காலச் சிறப்புக்களைப் பெற்றிருக்கும் ஒவ்வொரு மொழிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால், அதற்குச் சிறந்த எதிர்காலம் அமையும் என்பது உண்மை; தனித்தனி மொழி பேசும் மக்கள் கூட்டத்திற்கு, அரசர்ங்க அதிகாரங்கள் வழங்கப் பட்டால், அது மொழி உணர்வைப் பெறும் என்பதும் உண்மை. இவற்றையெல்லாம் நான் மறுக்கவில்லை.

இன்றுள்ள ஏற்பாட்டின் படி, கன்னட மொழி பேசும் மக்கள் தொடர்ந்து பம்பாய் மாநிலத் திலேயே சேர்ந்திருந்தால், கன்னடக் கலாசாரத்திற்குப் பெரும் பாதிப்பு கட்டாயம் ஏற்படும் என்று கூறுவதற்கில்லையென்றா லும், ஓரளவு பாதிப்பு எற்படலாம் என்பதை நான் மறுக்க வில்லை. ஆனால், அத்தகைய விளைவு ஏற்பட்டாலும், அது பெரிதும் வருந்தத்தக்க விஷயமல்ல என்று கருதுகிறேன். ஏனெனில், பொதுமக்களிடையே பொதுவான தேசிய உணர்வை உருவாக்கி வளர்க்க வேண்டியது தான் மிகவும் இன்றியமையாத உயிர்த் தேவை (vital need) என்று நான் கருதுகிறேன்.

தாங்கள் முதலில் இந்தியர்கள் என்றும், அதன் பின்னர் தான் இந்துக்கள், முஸ்லீம் கள், சிந்திகள், கன்னடக்காரர்கள் என்னும் உணர்வு கொண் டிருப்பதற்கு மாறாக, தாங்கள் முதலிலும் இறுதியிலும் இந்தியர் கள், இந்தியர்கள் மட்டுமே என்ற பொதுவான தேசிய உணர்வை உருவாக்கி வளர்ப்பது உயிர் நாடியான பணி என்று கருதுகிறேன். இதுதான் நாம் கடைப்பிடிக்க வேண்டிய இலட்சியமென்றால், உள்ளூர்ப் பற்றையோ அல்லது குழு உணர்வையோ தூண்டி வலுப்படுத்தக் கூடிய செயல்கள் எதையும் நாம் செய்யக் கூடாது. இன்றைய பம்பாய் மாநிலம் வெவ்வேறு இன மக்களைக் கொண்ட கதம்பம் போல உள்ளது. இதிலுள்ள பல இன மக்களும் பொது வாகச் சேர்ந்து செயலாற்ற வேண்டியுள்ளது. எனவே, தனிப்பட்ட உணர்ச்சி வளருவதற்கு இது ஊக்கம் அளிக்கவில்லை, மேலும் அத்தகைய உணர்ச்சி வளராமல் தடுக்கிறது எனலாம். ஆயினும் நன்மை அளிக்கும் ஏற்பாட்டைப் பேணிக் காக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். எனவே, கர்நாடகம் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்பதை நான் எதிர்க்கிறேன்.

 3. தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க, எவருமே மாநாட்டில் சாட்சி கூற முன் வராத தால், எனது கூட்டாளிகள் அந்தக் கோரிக்கையை ஒட்டுமொத்த மாக மறுத்து விட்டார்கள். இந்த விஷயத்தில் நானும் எனது கூட்டாளிகளும் ஒருமித்த கருத்துக் கொண்டிருப்பதால், இதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை. ஆனால், சிந்து விஷயத்தில், எனது கூட்டாளிகள் வேறுவிதமான முடிவுக்கு வந்ததுதான் எனக்கு வியப்பு அளிக்கிறது. கர்னாடகத்துடன் ஒப்பிடுகையில், சிந்து விஷயத்தில் இத்தகைய முடிவு எடுப்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை, பம்பாய் மாநிலத்துடன் இனணக்கப்பட்ட தால்,சிந்து வட்டாரம் கணிசமான அளவு நலம் பெற்றுள்ளது என்பதைப் பற்றி இருவிதமான கருத்துக்களுக்கு இடமில்லை.

சிந்துப் பகுதி நீண்ட தூரத்தினால் பிரிக்கப்பட்டிருந்த போதிலும் மாநில நிர்வாகத்தில், அதன் நிலை வேறு; மிகவும் கெளரவமான சலுகைகள் அளிக்கப்பட்டு, உயர்ந்த மதிப்புடன் வைக்கப்பட்டிருக் கிறது. ஆளுநரை அடுத்து உயர் மதிப்புப் பெற்றுள்ள ஒரு ஆனணயர் (commissioner) சிந்துவின் விவகாரங்களை நிர்வாகம் செய்கிறார்; சிந்துவின் சுதந்திரமான செயல்பாடு பெரிதும் பாது காக்கப்பட்டுள்ளது. அதனுடைய, தொன்மையான, மரபு வழக் கான சட்டங்கள் அ ப்படியே கடைப்பிடிக்கப்படுகின்றன. பம்பாய் மாநிலத்தில் பொதுவாகப் பிரகடனம் செய்யப்பட்ட சட்டங்கள், சிந்து வட்டாரத்திற்கும் அனுகூலமானது என்று கருதப்பட்டா லொழிய, அவ்வட்டாரத்திற்கு அவை அநேகமாய் அமல் செய்யப் படுவதில்லை. அங்குள்ள நடுவர் மன்றங்கள், பம்பாய் மாநிலத் தின் நடுவர் மன்றங்களிலிருந்து முற்றிலும் தனிப்பட்டு இயங்கு கின்றன. அங்குள்ள அரசினர் பணியும்,பம்பாய் மாநில அரசி னர் பணியிலிருந்து முற்றிலும் தனித்தே செயல்படுகிறது என லாம்; பெரும்பாலும் அங்கு இந்தியர்களே அரசினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பம்பாய் மாநிலத்துடன் சேர்ந்திருப் பதால், அதற்குப் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ள தாய்க் கூற முடியாது. அதற்கு மாறாக, பரந்து கிடக்கும் பம்பாய் மாநிலத்தின் வசதிகளையெல்லாம் பயன்படுத்தி, அது வெகுவாக முன்னேறியுள்ளது; அது தனித்திருந்தால், இத்தகைய முன்னேற் றத்தைக் கண்டிருக்க முடியாது. இணைந்திருப்பதால் தான், பம்பாய் மாநிலத்தின் செல்வ வளங்களை அது நன்கு பயன் படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது. மாநில அரசின் கவனத்தை அது பெரிதும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்த பின்னர், சிந்து வட்டாரம் தனக்குரிய அளவை விட மிகக் கூடுதலான நன்மைகளை மாநில அரசிடமிருந்து பெற்றுள்ளது. இந்த உண்மைகளின் அடிப்படையில் பார்த்தால், சிந்து தனியே பிரிந்து போனால்,வேறு என்ன கூடுதல் நன்மைகளைப் பெற்று விட ,முடியும்? இணைந்திருப்பதால் ஏற்படும் தீமைகள் இல்லா மல், தனித்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் அனைத்தையும் சிந்து ஏற்கெனவே பெற்றுள்ளதல்லவா?

 4. சிந்துவில் வசிக்கும் எல்லாச் சமூகத்தினரும், ஒரே குரலில் இந்த கோரிக்கையை எழுப்பவில்லை என்பது தெளிவு. இந்தக் கோரிக்கைத் தொடர்பாக சிந்துவில் வசிக்கும் முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களுக்குமிடையே பெரும் மன வேற்றுமை உள்ளது என்பது குழுவிலும் குழுவின் கூட்டு மாநாட்டிலும் அளிக்கப்பட்ட சான்று கள் தெளிவுபடுத்துகின்றன. முஸ்லீம்கள் தனி மாநிலம் கோரு கின்றனர், ஹிந்துக்கள் அதை எதிர்க்கின்றனர். இந்தப் பகுதியில், பொது மக்கள் கருத்தின் வரலாற்றைச் சற்றே ஆராய்ந்து பார்த்தால், சிந்துவின் மதிப்பு பற்றிய, பிரச்சினையை, 1917-ஆம் ஆண்டில் தான், அரசியல் உணர்வு பெற்ற, பெருமக்கள் எழுப்பி யுள்ளார்கள் என்பதைக் காணலாம்.

1917 ஆகஸ்டு மாத அறிவிப்புக்குப் பின்னர், அரசியல் சீர்திருத்தங்களின் விளை வாகச் சிந்துவின் மதிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை ஆராய்வதற்காக, 1917 நவம்பரில் சிந்தி மக்கள் சிறப்பு மாநாடு ஒன்றை நடத்தினர். சிந்திப் பகுதியின் முக்கிய முஸ்லீம் தலை வரான மதிப்புக்குரிய திரு.ஜி.எம்.புர்க்ரி (Bhurgri) வரவேற்புக் கமிட்டியின் தலைவராக இருந்தார்; திரு.ஹர்ச்சந்த்ராய் விஷின் தாஸ் (Harchandrai   vishindas) என்ற ஹிந்துப் பெருமகனார் மாநாட்டின் தலைவராக இருந்தார். மாநாட்டின் எதிரே நான்கு விதமான மாற்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன, அவை யாவன: (1) சிந்துவைத் தனி மாநிலமாக அமைத்தல்; (2) சிந்தவை யும் பலுசிஸ்தானையும் இணைத்து ஒரே மாநிலமாக்குதல்; (3) சிந்துவைப் பஞ்சாப்புடன் இணைப்பது; (4) சிந்து இப்போது உள்ளது போலவே பம்பாயுடன் இருப்பது.

சிந்துவைத் தனி மாநிலமாக அமைப்பது என்பது உள்பட மூன்று ஆலோசனை களை, சிறப்பு மாநாடு மறுத்து விட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டுமல்ல, சிந்துவிலுள்ள ஆணையரின் மதிப்பைப் பம்பாய் மாநிலத்தின் இதர பகுதிகளிலுள்ள வட்டார ஆணையர் களின் (Divisional commissioners) மதிப்பிற்குக் குறைப்பதன் மூலம், சிந்துவுக்கும் பம்பாய் மாநிலத்துக்குமிடையே மேலும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ஹிந்துக் கள் மற்றும் முஸ்லீம்களின் பேராதரவைப் பெற்ற தீர்மானம் சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் உள்ளடக்கிய ஒரு தூதுக்குழு, இந்திய மந்திரி திரு.மாண்டேகு     (Montague)- வையும், வைசிராய்    (Viceroy Lord Reading) ரீடிங் பிரபுவையும் சந்தித்து, தனி மாநிலம் ஆவதைச் சிந்து விரும்பவில்லையென்று திட்டவட்டமாக அறிவித்தது. பின்னர் 1918, 1919, 1920-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகளிலும், இரண்டு சமுதாயங்களையும் சேர்ந்த உறுப்பினர் கள் இ ந்தப் பிரச்சினையில், இதே போன்ற ஒருமித்த கருத்தையே வெளியிட்டார்கள்.

1920-க்கு பின்னர், ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றதன் காராணமாக, மாநாட்டில் இந்தப் பிரச்சினை ஆராயப்படவில்லை. இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. அதாவது முஸ்லீம்கள்தாம் தம்முடைய நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்; ஒன்றுபட்ட கண்ணோட்டத்திலிருந்து அவர்கள் தாம் விலகிச் சென்றுள்ளார்கள்; சிந்து மாநிலக் கோரிக்கை, இப்போது ஓர் ஒன்றுபட்ட கோரிக்கை அல்ல; ஒரு பிரிவினர் அதாவது முஸ்லீம்கள் மட்டுமே இந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளனர், என்பது.

 5. மக்களில் ஒரு சாரார் எழுப்பும் இந்தக் கோரிக்கையின் பால் பரிவுகாட்டுவதற்கு முன்னர், இந்தத் தனி மாநிலக் கோரிக் கைக்கான நோக்கம் சரியானது தானா என்பதைப் பற்றி முதலில் தீர்மானிக்க வேண்டும். முஸ்லீம் தூதுக் குழு இப்போது இந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளது; ஆனால் அதே சமயம், ஹிந்து தூதுக்குழு இதை எதிர்த்துள்ளது. எனினும், தமது கோரிக்கையின் நோக்கமென்ன என்று முஸ்லீம் தூதுக் குழுவும், அதைத் தாங்கள் எதிர்ப்பதற்கான காரணம் என்ன ஹிந்து தூதுக் குழுவும் வெளிப் படையாக எதையும் கூறவில்லை. தத்தம் காரணங்களை இரு தரப்பினரும் வெளியிட்டால் தான் அதனதன் தகுதிகளை எவ ருமே நன்கு ஆய்ந்து கொள்ளவியலும். எனினும், எனக்குக் கிடைத்த தகவலின்படி இதற்கான காரணங்களை நானே எடுத் துரைக்க விரும்புகிறேன்.

ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே நேச நல்லுறவு ஏற்படுவதற்கான சில நிபந்தனைகளைச் சில முஸ்லீம் பெருமக்கள் “”டில்லி முஸ்லீம் அறிக்கைகள்”” என்ற பெயரில் 1927 மார்ச் 20-ஆம் தேதியன்று வெளியிட்டனர். அந்த அறிக்கைகள் கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைத்தன: (1) சிந்துவைத் தனி மாநிலம் ஆக்க வேண்டும், (2) வடமேற்கு எல்லைப்புற மாநிலத்துக்கு இதர மாநிலங்களின் மதிப்பு அளிக்கப் பட வேண்டும், (3) பஞ்சாபிலும் வங்காளத்திலும், அங்கே வசிக் கும் முஸ்லீம் மக்கள்தொகைக்கு ஏற்பப் பிரதிநிதித்துவம் வழங்கப் பட வேண்டும். முஸ்லீம்கள் பெரும்பான்மையோராக உள்ளக் கூடுதல் மாநிலங்களை அமைப்பதுதான் இந்த அறிக்கைகளின் குறிக்கோள் என்பது இதிலிருந்து தெளிவாகும். தற்சமயம் பஞ்சா பிலும் வங்காளத்திலும் மக்கள்தொகையில் முஸ்லீம்கள் சிறிதளவு தான் கூடுதலாயுள்ளனர்.

இந்த மாநிலங்களில் மக்கள்தொகை யின் விகிதத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கோருவதன் மூலம், இந்த மாநிலங்களில் முஸ்லீம்கள் அரசியல் பெரும்பான்மை பெற்று, முஸ்லீம் அரசினை அமைக்க விரும்புகிறார்கள் என்பது கண்கூடு. பலுசிஸ்தானிலும், வட மேற்கு எல்லைப்புற மாநிலத்திலும் முஸ்லீம்கள் மிகப் பெரும் பான்னையோராய் இருக்கின்றனர். எனினும் அங்கே பிரிதிநிதிக் துவ அரசு அமைக்கப்படவில்லை. ஆதலால், அங்கே முஸ்லீம்கள் மிகப் பெரும்பான்மையோராய் இருந்த போதிலும், ஆட்சிபுரியும் பெரும்பான்மையோராய்   இருக்கவில்லை. இந்தக் குறைபாட்டை நீக்குவதுதான் மேற்கூறிய அறிக்கைகளின் நோக்கம். இதனால் முஸ்லீம் பெரும்பான்மையுள்ள நான்கு மாநிலங்கள் உருவாகும்; அங்கே முஸ்லீம் அரசுகளை அமைக்க முடியும்.

முஸ்லீம் மக்கள் மிகக் கூடுதலாய் வசிக்கும் சிந்துவையும் தனி மாநிலமாக்கி விட் டால், அது ஐந்தாவது முஸ்லீம் மாநிலமாகத் திகழும் என்பதே அவர்களுடைய கணிப்பு. இந்த முஸ்லீம் மாநிலங்களை அமைப் பதற்குப் பின்னாலுள்ள குறிக்கோள் யாது? வகுப்புவாத வாக் காளர் தொகுதி போன்றது தான் இது என்று முஸ்லீம்கள் கருது கின்றனர். முஸ்லீம் மாநிலங்கள் பற்றிய தங்களுடைய அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், வகுப்புவாத வாக்காளர் தொகுதியைக் கைவிட்டு விட்டு, எல்லா மாநிலச் சட்ட மன்றங்களிலும், மத்திய சட்டப் பேரவையிலும் கூட்டு வாக்காளர் தொகுதியை ஏற்றுக் கொள்ள ஆயத்தம் என்று, அறிக்கைகளை முன்வைத்த முஸ்லீம் பெருமக்கள் குறிப்பிட்டுள்ளனர். வகுப்புவாத வாக்காளர் தொகுதியை அமைத்திருப்பது முஸ்லீம் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றும், இதே நோக்கத்திற் காகத் தான் தாங்கள் முஸ்லீம் மாநிலங்களை அமைக்க வேண்டு மெனக் கோருவதாகவும் வாதாடுகின்றனர்.

முஸ்லீம் மாநிலங் களைத் தோற்றுவிப்பதன் மூலம், ஹிந்துக்கள் பெருவாரியாக உள்ள மாநிலங்களில், ஹிந்துப் பெரும்பான்மையினரிடமிருந்து முஸ்லீம் சிறுபான்மையினரை எப்படிப் பாதுகாக்க முடியும் என்பது புலனாகவில்லை. வகுப்புவாத வாக்காளர் தொகுதியின் மூலம் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய, அல்லது கிடைப்பதாக நம்பிக் கொண்டிருக்கக் கூடிய பாதுகாப்பை நீக்கி விடுவதனால், முஸ்லீம் சிறுபான்மையினருடைய நிலை பலவீனமடையும் என்று தான் உண்மையில் தோன்றுகிறது: ஆனால் இந்தத் திட்டத்தை நன்கு ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால், மேற்பரப்பில் தோன்றுவது போன்ற அவ்வளவு அப்பாவித்தனமானதல்ல இது. முஸ்லீம் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு இது மிகவும் தந்திரமான ஏற்பாடுடையது.

ஹிந்து மாநிலங்களில், ஹிந்து பெரும்பான்மை யினர் முஸ்லீம் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கினால், ஐந்து முஸ்லீம் மாநிலங்களில், ஹிந்து சிறுபான்மையினர், முஸ்லீம் சிறுபான்மையினரால் அதே போல அடக்கி ஒடுக்கப்படுவார்கள். தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதல், பயங்கரத்திற்கு எதிர்ப் பயங்கரம், இறுதியில் கொடுங்கோன்மைக்கு எதிராகக் கொடுங்கோன்மை என்ற முறையின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு ஏற்பாடு இது. இந்த அறிக்கைகளின், இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் இதுவே; சிந்து மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யின் உட்கருத்தும் இதுதான். இதில் எத்துணை ஐயமிருந்தாலும் அதை அகற்றிடும் பொருட்டு, நேரு கமிட்டி அறிக்கையை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அந்த அறிக்கை கூறுவதாவது: ”சிந்து மாநிலம் தனியாக அமைக்கப்பட வேண்டும் என்ற முஸ்லீம்களின் கோரிக்கை, மகிழ்ச்சியான முறையில், நேரடியாக முன்வைக்கப்படவில்லையென்று நாங்கள் கருதுகிறோம். அது வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்டது; அதனுடன் சிறிதும் தொடர்பற்ற வேறு பல கருத்துக்களுடன் அது சற்றும் ஒவ்வாத முறையில் பிணைக்கப்பட்டிருக்கிறது.” தனி மாநில கோரிக்கையின் உண்மையான அடிப்படையை நேரு கமிட்டி அம்பலப்படுத்த விரும்பவில்லை. உண்மையான அடிப்படை நோக்கம் அவ்வளவு புகழத்தக்கதல்ல என்று கருதியிருக்க வேண் டும். எனினும் அதனுடைய மோசமான தன்மையைத் தெரிந்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன்.

இதைப் பற்றி மெளலானா அபுல்கலாம் ஆஜாத் கூறியதையே கேட்போம். அண்மையில் கல்கத்தாவில் நடைபெற்ற முஸ்லீம் லீக் கூட்டத்தில் மிகவும் தெளி வாக, நறுக்குத் தெறித்தாற் போல அவர் பேசினார்; அவர் கூறிய தாவது: “”லக்னோ உடன்பாட்டின் மூலம், தங்களுடைய நலன் களை அவர்கள் விற்றுவிட்டார்கள். கடந்த மார்ச்சு மாதத்தில் வெளியிடப்பட்ட டில்லி அறிக்கைகள்தாம், இந்தியாவில் முஸ்லீம்களுடைய உண்மையான உரிமைகளின் ஒப்புதலுக்கு, முதல் தடவையாகக் கதவைத் திறந்து விட்டுள்ளது. 1917-ஆம் வருட உடன்பாட்டின் மூலம் தோன்றிய தனி வாக்காளர் தொகுதி ஏற்பாடு, முஸ்லீம் பிரிதிநிதித்துவத்திற்கு மட்டுமே உறுதி அளித்தது; ஆனால், முஸ்லீம் சமுதாயத்தினுடைய எண்ணிக்கைப் பலத்தை அங்கீகாரம் செய்வது தான், சமுதாயத்தின் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையானதாகும். இந்தியாவின் எதிர் காலத் தில் தங்களுக்கு உரிய பங்கு கிடைப்பதற்கு உத்தரவாதமளிக்கும் நிலைமையை டில்லி அறிக்கைகள் தோற்றுவித்துள்ளன. மக்கள் தொகைக் கணக்கின்படி, வங்காளத்திலும் பஞ்சாபிலும் முஸ்லீம் கள் மிகக் குறைந்த பெரும்பான்மைதான் பெற்றுள்ளனர்; ஆனால், டில்லி அறிக்கைகள் அவர்களுக்கு, முதல் முறையாக ஐந்து மாநிலங்களை அளித்திருக்கின்றன. இவற்றில், சிந்து, வட மேற்கு எல்லைப்புற மாகாணம், பலுச்சிஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்கள், முஸ்லீம்கள் மிகக் கூடுதல் பெரும்பான்மை பெற் றுள்ள மாநிலங்களாகும். இந்த மகத்தான முன்னேற்றத்தை முஸ்லீம்கள் உணர்ந்து கொள்ளவில்லையென்றால், அவர்கள் உயிர்வாழத் தகுதியற்றவர்கள் (கரவொலி). இப்பொது ஒன்பது ஹிந்து மாநிலங்களும் ஐந்து முஸ்லீம் மாநிலங்களும் இருக்கும். ஒன்பது மாநிலங்களில் ஹிந்துக்கள் முஸ்லீம்களை எப்படி நடத்து கிறார்கள், அதே போலத் தான், ஐந்து மாநிலங்களில் முஸ்லீம். களை ஹிந்துக்களை நடத்துவார்கள். இது ஒரு மகத்தான இலாப மில்லையா? முஸ்லீம்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்குக் கிடைத்த புதிய ஆயுதமல்லவா இது?” (ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஜனவரி 3,1928).

சிந்து மாநிலம் தனியாகப் பிரிக்க வேண்டு மென்ற கோரிக்கையின் உண்மையான நோக்கத்தை, எத்தகைய ஐயப்பாட்டிற்கும் இடமின்றி மிகவும் தெளிவாக இந்தப் பேச்சு எடுத்துரைக்கிறது. இந்த உண்மையான நோக்கத்தை, எத்தகைய கதிப்போக்கிற்குமிடையை (Destiny of sind) எத்தகைய தொடர்பும் இல்லை என்பது தெளிவு. முஸ்லீம் சிறுபான்மையினரின் பாது காப்புக்காகத் தீட்டப்பட்ட ஒரு பெரிய திட்டத்தின் சிறிய பகுதி இது. போருக்கான தயாரிப்புக்களைச் செய்வதே, சமாதானம் காக்க மிகச் சிறந்த வழி என்ற கோட்பாட்டை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.

6. இந்தக் கோரிக்கையின் உண்மையான நோக்கத்தை அறிந்து கொண்ட பின்னர், இந்தக் கோரிக்கைக்குப் பரிவுகாட்ட வேண் டுமா என்பது தான் நம் முன் உள்ள பிரச்னை. என்னால் இதற்கு அனுதாபமோ, ஆதரவோ காட்ட இயலாது; நல்ல நிர்வாகத்தை உளமார நேசிக்கும் எவரும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், நேரு கமிட்டி எத்தகைய முடிவு எடுத்தது? தனி மாநிலம் அமைப்பதற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டது.

“இந்தக் கோரிக்கையை வெளி யிட்டிருக்கும் பாங்கு, இந்த அறிக்கையின் தகுதிகளைப் பலவீனப் படுத்தி விட்டதாகக் கூறுவதற்கில்லை” என்று அது குறிப்பிட்டது. என்னுடைய நிலை இதற்கு முற்றிலும் மாறானது. வெளியிட் டிருக்கும் பாங்கு, உள் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என்றும், அந்த உள்நோக்கம் வெறும் அற்ப விஷயமல்லவென்றும், நிலை மையை முற்றிலும் மாற்றக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நான் கருதுகிறேன். இந்தக் திட்டத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் உள்நோக்கம் மிகவும் பயங்கரமானது என்பதில் எத்துணை ஐயமுமில்லை. பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கைகள் மூலம் நீதியையும் அமைதியையும் பராமரிக்கும் நோக்கம் கொண் டது அது. குற்றம் ஏதும் செய்திராத சிறுபான்மையினருக்கு, முஸ்லீம் மாநிலங்களில் ஹிந்துக்களுக்கும், ஹிந்து மாநிலங்களில் முஸ்லீம்களுக்கும், அவரவர் மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களில் செய்த குற்றங்களுக்காக, பழி பாவங்களுக்காகத் தண்டனை   பெறும் வாய்ப்பை இது அளிக்கிறது.

தங்களுடைய மாநிலங்களில் வசிக்கும் சிறுபான்மையினரை மக்களாகக் கருது வதற்கு பதிலாகப் பிணையக் கைதிகளாகக் வைத்திருக்க வகை செய்யும் ஒர் அமைப்பு, இவர்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர் கள் வேறொரு மாநிலத்தில் நடந்து கொண்ட மோசமான நடத் தைக்குப் பழிவாங்கும் வகையில் இந்தச் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு வகை செய்யும் ஒர் அமைப்பு, சுய கண்டனத்திற்கு     உட்பட்டதாகும். இத்தகைய       பறிமுதலுக்கு வழி வகுக்கும் குறைகள், எப்போதும் நேர்மையானவை, உண்மை யானவையென்று எவரால் கூற முடியும்? சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக, ஒர் அற்பக் காரணம் கிடைத் தாலும், அது, மாநிலங்களுடைக்கிடையே போர் மூண்டு விடுவதற் கான காரணம் ஆகிவிடக் கூடும். இத்தகைய அறிக்கைகளின் ஏற்பாட்டின் பின்விளைவுகள் மிகவும் பயங்கரமானவை, அவற் றைக் கண்டு நாம் வாளாவிருக்க முடியாது.

ஹிந்து மாநிலங்களில் முஸ்லீம்களை அடக்கி ஒடுக்க அதே வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தினால் மட்டும், இந்த ஏற்பாட்டின் தன்மையை     மேம் படுத்தி விட முடியாது. சச்சரவுப் பூசல், சீர்குலைவு ஆகியன இந்த ஏற்பாட்டில் உள்ளார்ந்து பொதிந்துள்ளன. இத்தகைய ஏற்பாடு இல்லாமல், முஸ்லீம்கள் தம்மால் அச்சமின்றி, பாதுகாப்பாய் வாழமுடியாது என்று கருதினால் இத்தகைய ஏற்பாடு இல்லாமல் அவர்களால் பாதுகாப்போடு வாழ முடியும் என்று உறுதியளிக் கும் விருப்பு வெறுப்பற்ற நம்பிக்கை ஏற்படும் வகையிலும், தேச விடுதலையைக் கூட ஒத்திப் போடலாம் என்று நான் கூறுவேன். “தொடர்ந்தாற் போல நடைபெற்ற பற்பல வரலாற்று நிகழ்ச்சிகளின் காரணமாகத்தான், இந்தியாவில் இன்றுள்ளபடி வெவ் வேறு இன மக்கள் பரவிக் கிடக்கிறார்கள்” என்றும், சமுதாய அடிப்படையிலான மாநிலங்களை அமைப்பதன் மூலம், “இன் றுள்ள வெளிப்படை உண்மைகளைத்தான் நாம் ஒப்புகிறோம் என்றும் நேரு கமிட்டி விவாதிக்கிறது. இது உண்மைதான் என் பதில் சந்தேகமில்லை. ஆனால், வகுப்புவாத உணர்வுகள் மிதமிஞ்சி இருக்கும் இச்சமயத்தில், தேசிய உணர்வுகள் தளர்ந்து பலவீனமுற்றிருக்கும் இந்த வேளையில், மத அடிப்படை கொண்ட இத்தகைய மாநிலங்களை உருவாக்குவதற்கு நாம் சம்மதிக்க வேண் டுமா என்பது தான் நம் முன்னுள்ள பிரச்சினை.

இந்துக்களும் முஸ்லீம்களும் தம்முடைய மத உணர்வுகளை மறந்து, தாங்கள் முதலிலும் முடிவிலும் எப்போதுமே இந்தியர்கள் என்ற உணர்வைப் பெற்றிருக்கும் போது, இத்தகைய மாநிலங்களை அமைப்பதுதான் பொருத்தமாயிருக்கும். எனினும், தாங்கள் முதலில் இந்தியர்கள், பின்னர்தான் இந்துக்கள், முஸ்லீம்கள் என்று அவர்கள் உணரத் தொடங்கும் வரையிலும் இந்த மாநில அமைப்புப் பிரச்சினை காத்திருக்கத்தான் வேண்டும். தனியாக, சிந்து மாநிலம் அமைக்க வேண்டும் என்ற பிரச்சினையின்பால், எனது கூட்டாளிகள் காட்டிய அனுதாப அணுகுமுறையை, மேற்கூறிய காரணங்களி னால், நான் எதிர்க்கிறேன்.

 7. பம்பாய் மாநிலத்திலிருந்து சிந்துவைத் தனியாகப் பிரிப் பதால் ஏற்படும் நிதித்துறைச் சிரமங்களைப் பற்றி நான் எதுவும் கூறாததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதற்குக் காரணம், நான் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதல்ல. அவற் றுக்கு நான் நிச்சயம் முக்கியத்துவமளிக்கிறேன். ஆனால், அவை மட்டுமே தீர்மானகரமானவையாய் இருக்க முடியாது என்பதே எனது கருத்து; நிதி சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டா லும் அல்லது அவை திரும்பப் பெறப்பட்டாலும், சிந்துவைத் மறுப்புக்கள் உறுதியாக நிலவியிருக்கும். 

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 4, பிரிவு 1)

Pin It