சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கவும் பொது மக்களுக்கு உதவவும் சில முக்கிய மாநகர்களில் கொண்டு வரப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில் திட்டம்.

சென்னையில் இரு பாதைகளில், வண்ணாரப்பேட்டைலிருந்து ப்ராட்வே, ஸ்பென்சர்ஸ், அண்ணாசாலை, கிண்டி வழியே சென்னை விமான நிலையத்திற்கும் (23.1 கிமீ) மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து வேப்பேரி, அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, பரங்கிமலை வரை ( 22 கி மீ) இரண்டுமே தலா 18 நிலையங்கள் உள்ளவாறு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு சுமார் Rs .16000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதில் 41 % தொகையை மத்திய மாநில அரசுகளும் மீதியை Japan International Cooperation Agency (JICA) இடம் கடன் பெற்று செலவழிக்கப் போகின்றன.

இதில் வன்னாரப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை வரை தரைக்கு கீழேயும் பிறகு விமான நிலையம் வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை தரைக்கு கீழேயும் பிறகு பரங்கிமலை வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

சுரங்க வழியை தரைக்கு சுமார் 12 மீ. க்கு கீழே வரும்படி அமைக்கப் போகிறார்கள். 4 கார் (1038 பிரயாணிகள்) மற்றும் சில வருடம் கழித்து 6 கார் (1580 பிரயாணிகள்) தொடர் வண்டிகள் இதில் பயன்படுத்தப்படும்.

இந்த தடங்களில் 2016 ஆம் ஆண்டு தினமும் 7,56 ,466 பேரும் 2026 ஆம் ஆண்டு தினமும் 10,64 ,048 பேர்களும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணசீட்டாக ஸ்மார்ட்கார்டும், தரைக்கு கீழ் உள்ள நிலையங்கள் முழுதும் குளிரூடப்பட்டவைகளாக இருக்கும்படி
அமைக்கப்பட்டுள்ளது . தொடர் வண்டிகள் சுமார் 80 கிமீ வேகத்தில் செல்லும். காலை ஐந்தில் இருந்து நள்ளிரவு 12 வரை இதனை இயக்க திட்டமிட்டுள்ளனர்.

முதல் 2 கிமீ வரை Rs .8 ல் ஆரம்பித்து அதிகபட்சமாக Rs .23 வரை பயணத் தொகையாக நிர்ணயம் செய்துள்ளனர். சுரங்க வழிகளில், பயணசீட்டில் விளம்பரங்கள் மற்றும் வண்டி நிறுத்துமிடம் மூலம் பணம் திரட்டவும் முடிவு செய்துள்ளனர்.

நாமும் ஒரு புதிய பயணத்திற்கு தயாராவோம்.

Pin It