தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
தேங்காய் - துருவியது அரை கப்
வேர்க்கடலை - அரை கப்
பச்சை மிளகு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
தனியா - 2 தேக்கரண்டி
பெரிஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 கரண்டி
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 3
செய்முறை:
வாணலியில் ஒரு கரண்டி நெய் விட்டு அதில் மிளகாய், தனியா, பெருஞ்சீரகம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும் பின் தேங்காய் துருவல் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியே சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். பச்சை மிளகை விழுதாக அரைத்துக் கொள்ளவும். சிக்கனை சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்போது வாணலியை சூடாக்கி அதில் வெண்ணெய் விட்டு உருக்கிய பின். பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகளையும் மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்க வேண்டும். அத்துடன் பொடித்த மசால் பொடி, மிளகு விழுது, வறுத்த தேங்காய் துருவல், ஒன்றிரண்டாக உடைத்த வேர்கடலை மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். தேவையான தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவிட்டு, நெய் பிரியும் தருணத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் தேங்காய் சிக்கன் ரெடி.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி