தேவையான பொருட்கள்: கசகசா, தேங்காய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கினை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 பாகங்களாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் பொடி மற்றும் அரைத்த மசாலாவைப் போட்டு சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். சற்று கொதித்தவுடன் உருளைக் கிழங்கினையும், உப்பையும் போட்டு குருமா கெட்டியானவுடன் இறக்க வேண்டும். இறக்கும் போது 2 அல்லது 3 துளி எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கினால் ருசியாக இருக்கும்.
உருளைக்கிழங்கு- கால் கிலோ
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 8
கசகசா - 2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்லு
பட்டை - ஒரு துண்டு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் - அரை மூடி
மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்