தேவையான பொருட்கள்:

ரவை: 500 கிராம்
பெரிய வெங்காயம்: 2
பச்சை மிளகாய்: 4
கடலைப்பருப்பு: 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு: 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை: சிறிது
உப்பு: தேவையான அளவு 

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ரவையை வெறும் வாணலியில் இட்டு வறுத்து, வாசனை வந்தவுடன் தனியே ஒரு தட்டில் கொட்டி ஆறவிட வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவந்து வரும்போது பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன், ரவையின் அளவில் இருமடங்கு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். நீர் கொதிக்கையில் சிறிது சிறிதாக ரவையினை விட்டு நன்கு கிளறியபடி இருக்கவும். மிதமான தீயில் உப்புமாவை மூடி வேகவைத்து இறக்க வேண்டும்.

Pin It