உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இரண்டு டிக்கெட் வாங்கியிருந்த ஒரு நபர் தன் சீட்டில் போய் உட்கார்ந்தார். அவரின் பக்கத்து சீட் காலியாக இருப்பதை பார்த்த வேறு ஒருத்தர், “அந்த சீட்டில் உட்கார யாராவது வருவார்களா?” என்று கேட்டார்.
“இல்லை, அந்த சீட் காலியாகத்தான் இருக்கும்” என்று முதல் நபர் சொன்னார்.
“நம்பவே முடியவில்லை, உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு, வராமல் போன அந்த நபர் ஒரு சரியான முட்டாளாகத்தான் இருக்க வேண்டும், என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்க,
“அந்த சீட் என்னுடையதுதான், என் மனைவிக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் புக் செய்திருந்தேன். ஆனால் பரிதாபமாக அவள் இறந்து போய்விட்டதால் இந்த சீட் காலியாக இருக்கிறது..”
“உங்கள் வாழ்க்கையின் சோகத்தை நினைத்தால், எனக்கே வருத்தமாக இருக்கிறது.. என்ன செய்ய..? அது சரி, உங்களுடன் மேட்ச் பார்க்க உங்கள் நண்பர், சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் யாரையாவது கூட்டி வந்திருக்கலாமே?”
“அவர்கள் எல்லோரும்தான் என் மனைவியின் இறுதி ஊர்வலத்துக்கு சென்றிருக்கிறார்களே..!”
"..??????????"
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
குடும்பம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குடும்பம்