பாம்பு படம் காட்டிய கதை
கல்தோன்றி மண் தோன்றாத காலத்து முன்தோன்றிய மூத்தகுடிகள் வாழ்ந்ததாக சொல்லப்படும் ஒரு வளமான தேசத்தின் குடிமக்கள் வர்க்க, இன, மொழி, சாதி, மத ஒடுக்குமுறைகளாலும், சுரண்டல்களாலும் பெரும்துயரில் சிக்குண்டு அவதிப்பட்டுக் கிடந்தனர். அவ்வேளையில் ஒரு நச்சுப் பாம்பு குட்டி ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு படம் காட்டிக் கொண்டிருந்தது. சோசலிசம்… சுதந்திரம்… விடுதலை…என்று விதவிதமாய் படங்கள் காட்டியது. அந்தப் பாம்புக் குட்டியை போனால் போகட்டும் என்று மக்கள் காப்பாற்றினார்கள். ஆனாலும் அந்த பாம்புக் குட்டி விடாமல் படம் காட்டிக் கொண்டிருந்தது. வேடிக்கைக் காட்டினால் கூட்டம் கூடத்தானே செய்யும். அந்த பாம்புக் குட்டியை வேடிக்கை பார்க்க பெரும்கூட்டம் கூடியது. கும்பலைப் பார்த்ததும் அந்த பாம்புக் குட்டி அடுக்கு மொழியில் அலங்கார வார்த்தைகளை அள்ளி வீசியது. “விடுதலை.. விடுதலை.. விடுதலை..” என்று பெருங்குரலில் முழங்கத் தொடங்கியது. உரிமையே உரிமை என்று மேடையில் நாடகம் போட்டது. கண்ணகி, கற்பு என்று கதைகள் சொன்னது…, பாடியது, ஆடியது, கூத்தாடியது. வித விதமாக வளைந்து நெளிந்தது.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆளுக்கும், ஒவ்வொரு சமயத்திற்கும் தகுந்தாற் போன்று ஒவ்வொரு படத்தைக் காட்டியது. அதன் பளபளப்பில், அடுக்குமொழியில், படமெடுத்து ஆடியதில் பெரும் கூட்டம் மயங்கியது. தானைத் தலைவா, உலகத் தலைவா..ஒப்பற்ற ஒரே தலைவா.. என்று கொண்டாடியது. நச்சுப்பாம்பை நல்ல பாம்பென நினைத்து மக்கள் அரியணை ஏற்றினர்.
ஆட்சிக் கட்டிலை கண்டதும் கண்முன் தெரியாமல் ஆளவட்டம் போட்டது. சுதந்தரம் நாறுகிறது, சுயாட்சி மணக்கிறது என்று திருப்பிப் போட்டது. நாற்காலி சுகத்தில் பிதற்றி நாற்காலியைப் பின்னி பிணைத்துக் கொண்டது. கண்ணகி, கற்பு என்று கதை விட்டதை மறந்து மனைவி, துணைவி…. தலைவி... சைடு.. கீப்… என்று வகைவகையாய் வகை தெரியாமல் வாழ்ந்தது. வதவதன்று தேசமெங்கும் குட்டிகளைஒ போட்டது. அவைகள் ஒவ்வொன்றும் படமெடுத்து எங்கும் ஆடி ஆர்ப்பாட்டங்கள் செய்து கொண்டிருந்தன. அவைகளை சொன்னால் இந்த குட்டிக் கதை பெரும் கதையாடலாய் நாறும்.
பின்பு திடுமென ஒருநாள் அந்த நல்ல பாம்பு ஒரு கொடிய விரியன் குட்டியை போட்டது. இரண்டு ஆண்கள் இணைந்துதான் அய்யப்பன் சாமி பிறந்தார் என்பதை நம்பும் மக்கள் இதையும் நம்பினர். அது வளர்ந்ததும் ஒன்றை ஒன்று விழுங்க முயன்றது. ஒன்றை ஒன்று மேடை போட்டு திட்டின. ஆனால் திரைமறைவில் கூடி குலாவின. இவ்விரண்டுக்கும் இடையில் நடந்த சண்டைகளில் நாடே நாறிப் போனது. அந்த நாட்டில் நல்ல பாம்புக் குட்டிகளும், விரியன் குட்டிகளும் மட்டும் வாழமுடியும் என்று ஆனது. அது மனிதர்கள் வாழ முடியாத தேசமாயிற்று. இந்த பாம்புகளின் மகுடி ஒசையில் நாடே மயங்கி நாறிக் கிடந்தது.
மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கம் தெளிந்து உற்று நோக்கினர். அரியணையில் இருந்தபொழுது அவைகள் குடித்த மனித உயிர்கள் கணக்கில் அடங்காதவை. பாம்புப் புற்றுகளை தேசமெங்கும் கட்டி எழுப்பினர். அதுவும் அதன் பரிவாரங்களும் செய்த அட்டூழியங்களால் மக்கள் அதை ஒரங்கட்டினர்.
அது இதுவரை காட்டிய படம் காட்டியதெல்லாம் “பட்டை நாமத்தை” தான் என்று மக்களுக்குப் புரிந்தது.
ஆனால் காலம் கடந்து போயிற்று. நல்ல பாம்புகளும், விரியன் பாம்புகளும் மட்டுமே அந்த அரியணையில், நாற்காலியில் அமர முடியும் என்பது எழுதாத சட்டமாகி போனது.
இந்த தேசத்தின் இரத்த உறவுகள் பக்கத்து தீவுக்காட்டில் வாழ்ந்து வந்தனர். அந்த காட்டின் ராஜாவான சிங்கம் தனது சொந்த மக்களை, இந்த தேசத்தின் இரத்த உறவுகளை, மண்ணின் மைந்தர்களை வேட்டையாடி, நரமாமிசம் தின்றது. மக்கள் துடிதுடித்து பதைத்தனர். நர வேட்டையை தடுக்கப் போராடினர்
ஒருநாள் அதிகாலையில் இந்த நல்ல பாம்பு முட்டையையும், பாலையும் குடித்து மயங்கிக் கிடைக்கையில் அதற்கு திடுமென குயுக்தி தோன்றியது. தலையிலும், காலிலும் மனைவியும், துணைவியும் வெண்சாமரங்கள் வீச பரிவாரங்களுடன் கடற்கரையில் மாபெரும் உண்ணாவிரதம் அறிவித்தது. தானை தலைவன் உண்ணாவிரதம் கண்டு நாடே கண்ணீர் விட்டது; பொங்கி எழுந்தது என்று சின்னத்திரையில் பெரிய படம் காட்டிது. இந்த உண்ணாவிரதம் கண்டு சிங்கம் நரவேட்டையை நிறுத்தி விட்டது என்று தேர்தல் படம் காட்டியது. எருதுகளும், குதிரைகளும் அலற சக்கரத்தின் மீது அமர்ந்திருந்த மூன்று சிங்கங்களும் அந்தப் படத்தை பெரியதாக ஊதி பெருக்கி காட்டின. ஆனால் நரவேட்டை தொடர்ந்தது…. தொடர்கிறது…
இப்பொழுது புதுக்கதை ஒன்றை இந்தப் பாம்புகள் கூற தொடங்கி உள்ளன. மிகவும் வயதாகி விட்டதால் இந்த நல்ல பாம்பு இனி மேல் “மாணிக்கங்களை” மட்டும்தான் கக்கும் என்பதாக அது இருந்தது. மக்கள் எல்லாரும் இந்த வயதான பாம்பு மாணிக்கங்களை கக்கும் என்று வாயைப் பிளந்து கொண்டு பார்த்து கொண்டிருந்தனர்.
அந்த கிழப்பாம்பு மிகப் பெரியதாக வாயைப் பிளந்து பெரிய படம் எடுத்தது. வாயை திறந்து அது..உஸ்ஸ்..உஸ்ஸ் கக்கியது. ஆனால் அதிலிருந்து மாணிக்கங்கள் கொட்டவில்லை. “உஸ்ஸ் … உஸ்ஸ்… டேஸ்சோ……டேஸ்சோ… டேசோ.” என்று கடும் விசத்தைத்தான் கக்கியது. கடைவாயில் இரத்தம் ஒழுக நமட்டுச் சிரிப்பை சிங்கங்கள் உதிர்த்தன.
இப்பொழுது மக்களுக்கு இன்னும் மிகவும் தெளிவாகப் புரிந்தது. அது நல்ல பாம்பல்ல கொடிய நச்சுப்பாம்புதான். எத்துணை வயது முதிர்ந்தாலும் அது மாணிக்கங்களை கக்காது. பட்டை நாமம் படத்தைத்தான் காட்டும் என்று!
இப்படியான உங்கள் வீரமான விமர்சனங்கள் தொடரவேண் டும். அதன் மூலம் விடுதலைப்புலிகள ் உருவாக்கி வைத்த சுயமோக அரசியலில் இருந்து தமிழ்நாட்டு இளைஞர்கள் விடுபட வழிபிறக்கும். இல்லாவிட்டால் "செந்தமிழன்களின ்" பின்னால் செல்லும் இளைஞர்களுக்கும் முள்ளியாவ்க்கால ் மோட்சமே கிடைக்கும் ஆபத்திருக்கிறது . அத்தகைய ஆபத்து வராமல் தடுக்க உங்களின் நடராஜ நர்த்தனம், அது ஊழித்தாண்டவமானா லும் கண்டிப்பாக தேவை . எனவே தொடர்ந்து இப்படியான கட்டுரைகளை, இல்லை இல்லை கருத்துப்பெட்டக ங்களை படையுங்கள். கீற்று இணையதளம் இருக்கும் வரை நமக்கென்ன கவலை. யதார்த்த உலகில் ஈழம் கிடைக்காவிட்டால ் என்ன? இணையத்தில் படைப்போம் ஈழத்தை. யார் நம்மை தடுக்கமுடியும்?
மாநாட்டின் நோக்கம் குறித்து டெசோ தலைவர் கலைஞர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத் துருவில், தனியீழம் தொடர்பான தீர்மானம் மாநாட் டில் நிறைவேற்றப்படாத ு என்று சொன்னதுதான் தாமதம் - டெசோ என்று பெயர் வைத்துக் கொண்டு தனியீழம் கேட்கும் தீர்மானம் மாநாட்டில் இடம் பெறாது என்றால் என்ன பொருள் என்று வீராதி வீரர்கள் போலே தோளைக் குலுக்கினார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், டெசோவை இரண்டாவது முறை புதுப்பித்த போது தனியீழம் கேட்கும் அதன் குறிக்கோளை வரவேற்றார்களா என்றால், அதுதான் இல்லை.
அப்பொழுதும் ஏறுமாறான விமர்சனங்களில்த ான் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை மய்யப்படுத்தி அவர் எது செய்தாலும் அதனைக் கொச்சைப்படுத்து வது என்ற திசையில் எழுதி வந்தனர்.
மாநாடு நடக்காது; தடை செய்யப்பட்டு விடும் என்றனர். அதற்கான முயற்சிகளில் பலரும் ஈடுபட்டனர் என்பதும் உண்மைதான். டெசோ அமைப்பில் பதற்றப்படாத, பக்குவமான முயற்சி களினால், எதிர்ப்பாளர்களி ன் முகங்களில் கரி தடவப்பட்டு, டெசோ மாநாடு வெகு சிறப்பாகவே அறிவிக்கப்பட்ட இடத்திலேயே அட்டியின்றி நடைபெற்றது.
சில பல காரணங்களால் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட ிருந்த தலைவர்கள் வரவில்லை என்றாலும் உலகம் தழுவிய அளவில் பேராளர்கள் பங்கு கொண்டனர்.
சிங்களவரான - இடதுசாரி எண்ணம் கொண்ட டாக்டர் விக்ரம பாகுகர்ண ரத்தினே அவர்களே கலந்து கொண்டு ராஜபக்சேயின் பாசிச நடவடிக்கைகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டினார். மிக அருமையான தீர்மானம் 14 - ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட து. தீர்மானத்தின்மீ து குறை சொல்ல முடியாத நிலையில் தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் சம்பிரதாயமான முறையில் மாநாடு நடைபெற்றது என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டுள்ளன.
இந்த மாநாடு வெற்றியா, தோல்வியா என்னும் அளவுகோல் எங்கே இருக்கிறது தெரியுமா? நமது எதிரிகளிடத்தில் தான் இருக்கிறது.
ஈழத்திலிருந்து மாநாட்டுக்குச் செல்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் இலங்கை அரசால் கண்காணிக்கப்படு வார்கள் என்று அச்சுறுத்தும் வகையில் இலங்கை அரசு கருத்துத் தெரிவித் திருந்தது. (அதனைக் கண்டித்துக்கூட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்).
இலங்கை அதிபர் ராஜபக்சே டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்தும் டெசோவின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாகும்.
இதன் மூலம் டெசோ நடத்தும் மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது என்பது வெளிப்படையாகி விட்டதா - இல்லையா?
மாநாடு முடிந்த நிலையில்கூட இலங்கையில் உள்ள சிங்களவர் அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ன கருத்துக் கூறியுள்ளது?
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளையாட்டுத்தனம ாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்திய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக தி.மு.க. இருப்பதால், மகிந்த ராஜபக்சே அரசு இந்த விவகாரத்தை சிறியதாகக் கருதக் கூடாது.
டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்மீத ு கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அய்.நா.வில் இந்தியா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட தனியீழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதனைப் பார்க்க வேண்டும் என்று அந்த அமைப்புக் கூறியுள்ளதே!
எதிரிகள் நம்மைச் சரியாகப் புரிந்து கொண் டுள்ளனர். ஆனால் இங்குள்ளவர்களோ டெசோ மாநாடு தோல்வி என்கின்றனர். இவர்களை எது கொண்டு சாற்றுவதோ!
ஆனால் இன்றைய ஈழ தமிழர்களின் நிலைமைக்கு ஒட்டு மொத்தமாக விடுதலை புலிகளை குற்றம் சுமத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
தமிழக அரசியல்வாதிகளின ் கேவலமான பதவி வெறி பண வெறி அதற்கும் மேலாக இந்திய ஏகாதிபத்தியத்தி ன் பங்கு கணிசமாக உள்ளது.
ஈழ விடயம் என்பது அடுத்த நாட்டு விடயம் என்று 2009 லேயே தளபதி ஸ்டாலின் அவர்களும் அன்பழகநாறும் சொல்லிவிட்டார்க ளே. பின்பு எதற்கு டெசோ மாநாடு.
சிகிச்சைக்காக வந்த பார்வதி அன்னையை கூட ஈவிரக்கம் இல்லாமல் விரட்டி அடித்தனர்.கண்டவ ர்கள் எல்லாம் சிகிச்சை அளிக்க இது என்ன சத்திரமா என்று சு.சாமி கொக்கரித்தான்.அ தற்கு பக்க பலமாக கருணாவின் நடவடிக்கை அமைந்தது. அனைத்திற்கும் காரணம் வைத்திருப்பார்கள்.
காவிரியில் இருந்து தண்ணீர் வரவில்லை. விவசாயிகளின் நிலைமை மிக கொடுமை, அதற்கு ஆக்கபூர்வமாக எதாவது தி.மு.க செய்ததுண்டா. கூரை ஈறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஈறி வைகுண்டம் போக போறானாம். கூடங்குளத்தின் அணு உலையில் கருணாவின் நிலை பாடு மெய் சிலிர்க்க வைக்கிறது. நாளைக்கே இட ஒதுக்கீடு கூடாது என்று சொன்னால் நிறைய வாக்கு கிடைக்கும் என்றால் அதையும் செய்பவர்தான் கருணா. ஒவ்வொரு டெசோ விளக்க கூட்டத்திலும் இன்றைய ஈழ தமிழர்களின் நிலைமையை விளக்குகிரர்களோ இல்லையோ விடுதலை புலிகளை கொச்சை படுத்தி இந்திய ஏகதிபதயதிற்கும் , பார்பனர்களுக்கு ம், காங்கிரேச்சுக்க ும் செவேன்னே தொண்டு செய்கின்றனர். வாழ்க அவர்களின் தொண்டு. விக்ரமபாகு கருணாரத்ன விடம் இருக்கும் நாடு நிலைமை கூட இங்குள்ள தி.மு.க விடம் சிறிதும் கிடையாது எனபது தான் மிகவும் கவலைக்குரியது.
கருனாநிதியை நம்பினோர், கைவ்விடப்படுவர் .
> எப்போதெல்லாம் , ஜெய அம்மை ஆட்சி வருமோ , முற்போக்கு சக்திகள் -ஒடுக்கப்படும் , ஜெயிலில் அடைக்கபடும் , ஜனநாயகம் காற்றில் வீசப்படும் . போலிசு அராஜகம் அதிகமாகிவிடும் .
சசிகலா கும்பல் கொலை கொள்ளை - நில அபகரிப்பு - அரசு வேலைகளை - அதிக காசுக்கு விற்றல் , நீதிபதிகளை மிரட்டல் , அரசின் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்த்தல் , காவி ஆர் எஸ் எஸ் - இந்து முன்னணி - பார்பன வெறியர்களின் கை ஓங்கி இருக்கும் !
>ரெண்டுமே , மக்கள் விரோத , சமூக விரோதிகளின் ஆட்சிகளே
> கில்லேடின் மெசின்களை உற்பத்தி செய்யும் " ரொபட் கம்பனியை நிறுவவேண்டும் . இந்த வெள்ளை வேட்டி- வெள்ளை சட்டை சமூக விதிகளை அதில் வைத்து சம்காரம் பண்ண வேண்டும் !
RSS feed for comments to this post