இவ்வளவு நாட்கள்
இழந்ததெல்லாம் இழப்பல்ல
உன்னை
நான் சேர்ந்துவிட்டால்..
இனிமேல்
பெறுபவை எதுவும்
வெற்றியல்ல
உன்னை
நான் இழந்துவிட்டால்...
---------------------------
வாழ்க்கையையே
பணயம் வைத்தேன்
உன் காதலுக்காக
என் காதலையே
பணயம் வைத்தாய்
உன் வாழ்க்கைக்காக..
---------------------------
காதலுக்குள்
இறங்கியவர்களை விட
காதலை தள்ளி நின்று பார்க்கிறவர்கள்
அள்ளிச் செல்கின்றனர்
கையளவு காதலையாவது..
--------------------------
மரணத்தின் விளிம்பில்
கண்மூடி சரிகிறேன்..
உன் முகம் மட்டும்
இறுதியாய்
என் நினைவில்..
உடனே
வாழ்தலுக்கான
பெருவிருப்போடு
மரணத்தை வெல்கிறேன்..
-------------------------
எப்போது
உடன் வரப் போகிறாய்
ஒப்பனைகளை
நானே ரசிக்கும்
தனிமையைக் கொல்வதற்கேனும்..
----------------------------
- இவள் பாரதி (