உனக்கு
இணையத்தைப் பற்றி
தெரியவில்லை என்பதில்
பெரிய வருத்தமில்லை..
உனக்கு
என் இதயத்தையே
புரிந்து கொள்ள முடியாத போது
எதைத் தேடி
எதைக் கண்டடைந்து
என்னாகப் போகிறது.. ?
---------------------------
உன்னில்
விழுந்து கிடக்குமென்
இதயத்தின் கதறலே
உன் செவியில்
விழாத போது
எந்த சிம்பொனி
உன் காதுகளை எட்டும்?
---------------------------
உன்னைச் சுற்றி
வருமென் நினைவுகளை
புறந்தள்ளி
என் நேசத்திற்கு
பெரும்கொள்ளி
வைத்துவிட முயல்கிறாய்
ஒருக்காலும்
நீயளித்த நம்பிக்கை
வார்த்தைகளுக்கு முன்னால்
தோற்று திரும்பாதென் நேசம்.
- இவள் பாரதி (