வரதட்சணை கொடுமையின்னுHut

பொறந்த வீடு வந்து சேர்ந்தா

நான் பெத்த மூத்த மக...

காலேஜில் படிக்கும் கடைசி மகனுக்கு

பீஸ் கட்டப் பணமில்ல...

பாதில விட்டுப்போட்டு

காரேஜில் சேர்ந்துகிட்டான்...

வச்சிருந்த கால் பவுனும்

மளிகைக் கடை பாக்கின்னு

அடகுக் கடை போயிருச்சு...

கார்ப்பரேஷன் குழாயில்

குடிநீரே வர்ரதில்ல..

குடத்துக்கு ஒரு ரூபாய்

குடுத்து மாளவில்ல...

ஓலைக் குடிசைன்னாலும்

இருக்கிறது சொந்த வீடு

வாடகைப் பிரச்சனைன்னா

ரோட்டுக்கு வந்துருப்போம்...

இவ்வளவு பிடுங்கலிலும்

இருக்கவே இருக்குது...

இலவச தொலைக்காட்சி..!

காற்றாலை புண்ணியத்தில்

கரண்ட்டும் வந்துச்சுன்னா,

மறந்திருப்போம் கவலையெல்லாம்...

கரன்ட்டே இல்லன்னாலும்

சமாளிக்க வழி இருக்கு...

தெருமுக்கில் டாஸ்மாக்கு

பொண்டாட்டி மறைச்சு வச்ச

பணமிருக்கு குவாட்டர் வாங்க...

அழுத்தும் கஷ்டமெல்லாம்

ஆறுதல் சொல்லி சொல்லி

ஓடுது எங்க வாழ்க்கை...

எப்பத்தான் விடிவுகாலம்

அதுமட்டும் தெரியலங்க...

 

- சுந்தர்,ருவாண்டா, மத்தியக் கிழக்கு ஆப்பிரிக்கா

Pin It