மாவுருண்டைக்குப்
பேர் போனது
வடக்கத்தி அம்மன்
மாவில்
கண் வைத்து
அருள் கொண்டாடுகிறார்
நமது
சாராயங்குடித்த
சாமியார்
ஆடிய ஆட்டத்தில்
நெருஞ்சிமுள்ளில்
தவ்விக்
குதித்தும் விட்டார்
பின்பு
ஆவேசம்
போன இடந்தெரியாமல்
உள்ளங்கால்களை
தரையில் தேய்த்து
ஆடி மேற்செல்கிறார்
- வே. ராமசாமி
கீற்றில் தேட...
நெருஞ்சிச்சாமி
- விவரங்கள்
- வே.ராமசாமி
- பிரிவு: கவிதைகள்