கீற்றில் தேட...


Candleமாடத்தில் ஒரு மெழுகுவர்த்தி
இருக்கும் தைர்யத்தில்
தனித்திருந்தேன் அறையில்

தளிரென ஒயிலாய்
அசைந்துருகி ஒளியீந்தும்
அதன் திரியிலிருந்து
சுடர்ந்து பரவியது இருட்டு

ஒளியையே எதிர்பார்த்திருந்த
அதிர்ச்சியிலும் இருளிலும்
அமிழ்பவனுக்கு சொன்னது:
உனக்கென ஒளி வேண்டின்
பந்தமாய் கொளுத்திக்கொள்ளேன்
உன் தலைமுடியை

என்னையே உருக்க அஞ்சித்தான்
இதுகாறுமதை
தியாகவானாய் கொண்டாடிய கபடம்
எப்படித் தான் புரிந்ததோ மெழுகுவர்த்திக்கு..? 

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)