மருதாணி தேடாதே
தொட்டு வைத்துக்கொள்
உன்வெட்கத்தை
.
வேரிலும்
பூக்கள் பூக்கும்
மரத்தடியில் நீ
.
தெரு முழுக்க
ஓடும்
நானெழுதிய முத்தம்
மழையில் நனைகிறாய்
.
தாகம் தணிய
முத்தமிடுகிறது
உன் உதடுகளில்
ஸ்டிரா
.
சிரிக்கும்போதெல்லாம்
தடுக்கி விழுகிறேன்
உன்
கன்னக்குழியில்
- மாறன்