
இசையறியாப் பாமரனின்
அதிகாரப் பாதுகாப்பில்
விதியின் விளையாட்டாய்
உள் லயம் புரியா சிறைமை வெம்பி
வறண்டு காயத்தொடங்கின
இசையின் ஊற்றுக்கண்கள்
தீண்டியதொரு ரசி கரம்
நவீனத் திசையொன்றிலிருந்து
மாந்திரீக வசீகரத்துடன்
விரல்தொட அதிரும் மிரு தங்கம்
மீட்டலில் சிலிர்க்கும் வீணையாய்
மூச்சுக்காற்றில் வேய்ங்குழலின் வெப்பம்
மத்தள முரசங்களாய்
உணர்ந்த தருணங்களுமுண்டு
நாவுக்குள் நா உரச மோர்சிங்
உதடு பொருத்தி உருக
உதட்டார்கனின் ரீங்காரம்
கொங்கைகளில் சங்கூதும் குறும்பனின்
வித்தக ஸ்பரிச லாவகம்
ஒற்றா உடலில் எழும்பிச் சுழல்கிறது
இசைக்கலவை.
தீ மூட்டி சென்றுவிட தினந்தோறும் எரிய
சிதையிலிருந்து பறக்கின்றன
இசைத்துணுக்குகள் இச்சை சுமந்து.
காதலைச் சொன்ன மாலையில்
ஒரே வரிசையில் நீண்டன நட்சத்திரங்கள்
சதுரமாய் சிரித்தது நிலவு
மணலலைகள் கிளம்பிக் கடலுக்குள் சென்றன
கரையிலிருந்து
திமிங்கிலமொன்றினை விழுங்கியது
சின்ன நெத்திலி
பகலிலேயே அல்லிகள் பூக்க
பாலையிலிருந்துப் பீறிட்டன நீருற்றுகள்
பூமி தொடவில்லை பாதங்கள்
சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கினேன்
ஒன்பதாம் திசையில்.
பட்டமரமொன்றிலமர புஷ்பித்தது விருட்சமாய்
இலைகளில் இருந்தும் கமழ்ந்தது சுகந்தம்
தீத்தொட இனிக்கிறது தித்திப்பாய்
மாலைச் சூரியன் பொழிந்தான் பனிமழை
எல்லாப் பறவைகளும்
காதல் பறவைகளாக மாறிவிட்டன
காதலைச் சொன்ன மாலையில்
- அன்பாதவன், மும்பை