
சிலமுத்தங்களும்
புன்னகைகளும்
மட்டும் எனக்குப்
போதுமானதென்று
உனக்கு யார் சொன்னது...?
என் ஆயுளைத் தின்கிற
உன்
நினைவுகளின் காலடி
ஓசையற்று நகர்கிறது
தொலைவிற்கு...
உனக்கான கடிதங்கள்
எழுதப்படாமலேயே
எனக்குள் இறந்தன
கவிதைகளும்...
நீளும் தொலைவுகளை
நெருக்கத் திராணியற்று
நெளியும் என் வாழ்வு..
இப்போது
உன் காலடிகளையும்
தொலைவிற்கு
செலுத்துகிறது காற்று
மழையைப்போல
நிரந்தரமற்றிருக்கும்
நமது பிரிவு
அதைப்போலவே
அழுத்தமானதும்
கவனிக்கச்செய்வதும் கூட
- த.அகிலன் (