
அதன் புன்னகையை
ஒழிக்கிறது
கடல்மடியில்
அவள்
அனாசயமாய்
அதை எடுத்துச்சூடுகிறாள்
தன் கழுத்தில்
நிலவு
வானில் வரையும்
அவள்
கைகளிற்குச் சிக்காத
ஒளியின் புன்னகையை
அவள் என் புன்னகையை
விற்றுக் கொண்டிருக்கிறாள்...
தான்
நட்சத்திரங்களை
உதிர்ப்பதறியாது
ஒரு
பூவின் புன்னகை
செத்துக் கொண்டிருக்கிறது
அவள் கூந்தலில்
- த.அகிலன் (