லேசானத் தூறல் தொடர
இதமான குளிர்ச் சூழல்
முட்புதரின் சங்கீதமாய்
'புல் புல்' சீழ்க்கை
பறக்கும் ஹைக்கூவாய்
தாவித்தாவி ' மணிப் பிளான்ட்டில்'
அமர்ந்து கவிசொல்லும் தேன்சிட்டு
எருக்கஞ்செடி கிளைகளில்
குதூகலிக்கும் குயிலினை
வீட்டெதிர்ச் சேற்றில் புரண்டுறுமும்
பன்றிகளின் குரலிலும் இசையாய்
சுகமாயிருக்கிறது
கண்மூடி கைத் துழாவ
இருக்கிறாய் நீ என்னருகில்

அன்பாதவன், மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It