அவளை
அணைத்து
அழுத்தி முத்தமிட்டான்.
அவள்
வெட்கப்படவுமில்லை
சிணுங்கவுமில்லை.
பின்
அவன் விருப்பப்படி
அவளை எரிக்காமல்
புதைத்துவிட்டனர்.
====
சாளரம் ஊடே
நுழைகின்ற
வெயில் கீற்றில்
தெரிகின்ற
தூசி துகள்கள்
எப்போதும் நிதானமின்றி
அலைகின்றன
எதையோ தேடியபடி…
சாளரம் அடைபட்டால்
நின்று போகும்
ஆட்டமெல்லாம்.
====
காதலர்களின்
பூங்கா பேச்சினில்
கொஞ்சம் கொஞ்சமாய்
பிடுங்கப்பட்டு
அணுஅணுவாய்
இறந்து கொண்டிருந்தன
புற்களும்
தூரத்தில் ஒரு
இதயமும்..
====
அவள் பிரிந்தபின்
அவன்
வெயிலை
ரசிக்க கற்றுக்கொண்டான்.
- அய்யப்பராஜ்
RSS feed for comments to this post