ஆர்பாட்டம் செய்து அழுகிறாள் வான மகள்!
ஆசை கொண்ட மனாளன்
ஆதவனை காணவில்லை என்று!
அதிகாலையில் வந்து விடுவான்
ஆதவன் என்று
ஆறுதல் சொல்வதற்கு
அருகில் யாருமே இல்லையோ ?
காத்திருக்கிறேன்!..........
காதலுக்காக
தன் மலர்களை
தியாகம் செய்துவிட்டு
தனிமையில்
காத்திருக்கும் ரோஜா செடிகளை போல
நானும் காத்திருக்கிறேன்
உனக்கான என்
ஊமை காதலோடு!
தியாகம்
எனக்கு மிகவும் பிடித்தது
செருப்பு!( ?)..
ஏனெனில்
நான் அதை மிதித்தாலும்
அது என்னை சுமக்கிறது !!......
- சசிகலா கவிதைகள் (sasi_