தொலைத்து
போராடி மீட்டெடுக்கவும்
துணிவற்று
செத்துக் கிடந்தேன் நேற்று.
முகமும்
முகவரியும்
அற்றவன் நானென்பதால்
என்னை
யாரென்று
அடையாளம் காணவும்
முடியாது திணறியது மனிதம்..
என்னை
புதைத்துவிட முயன்றவர்களுக்கு
தோல்வி
எனக்கென
ஓரடி மண்ணும்
உரிமையானதாக இல்லை.
எரித்து
அழிக்க முனைந்தவர்களுக்கும்
தோல்வி
இயற்கை வளங்களெதுவம்
எனக்கென்று இல்லை.
நாற்றமெடுக்க கிடக்கும்
எனக்கு
நேற்று வரை தெரியவில்லை
உரிமை
உடமை என்பதற்கான மதிப்பு.
கொத்தித் தின்ன
அந்நிய பருந்துகள் வருமென
காத்துக் கிடக்கிறேன்
உலகமயப்பட்ட பிணமாக.
- இ.இசாக், துபாய் (