
என் மீது எப்போதும்
அக்கறையோடு இருப்பதாக
நம்புகிறேன்
இப்போதும்
அதனால்தான்
நீ
என் கால்களில் சுற்றிய
சங்கிலியை
கொலுசென
அறிமுகம் செய்தேன்.
நீ
எப்போதும்
என் வளர்ச்சியை விரும்புவதாக
நம்புகிறேன்
இப்போதும்
அதனால்தான்
நீ
என் கைகளில் மாட்டிய
விலங்குகளுக்கு
வளையலென
புதுப்பெயர் சூட்டிக்கொண்டேன்.
நீ
எப்போதும்
எனக்காக இயங்குவதாக
நம்புகிறேன்
இப்போதும்.
அதனால்தான்
நீ
என் செயல் தடுக்கயிட்ட
சிக்கல் முடிச்சுகளுக்கும்
தாலியென
சமாதானம் செய்துக்கொண்டேன்.
நீ
எப்போதும்
என் நினைவோடு இருப்பதாக
நம்புகிறேன்
இப்போதும்.
அதனால்தான்
உன்
உள் மனசறிந்தும்
சேவையாற்ற
கடமைப்பட்டவளாக இருக்கிறேன்
நான்.
நீ
எனக்கு
முகமொன்று இருக்கிறதெனவும்
ஏற்க மறுக்கிறாய்.
- இ.இசாக், துபாய் (