அரிசி குருணையைக்
கொத்திக் கொண்டிருந்த
Henசேவலுக்குத் தெரியாது
இதுதான் தனது
கடைசி இரவென்று

அதிகாலையில்
அது கூவியபிறகுதான்
தூக்கம் கலைந்தோம்
விருந்து தயாரிப்பதற்காக

கத்திக் கீறலில்
ரத்தம் பீறிட்டபோது
முனகி அடங்கியது
அதன் உயிரின் குரல்

அறுத்துச் சிதைத்தபோது
பதைபதைத்த மனது
கொதித்த குழம்பு
வாசனையில்
அடங்கிவிட்டது.

கோவி. லெனின்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It