நிசப்தப் பொழுதில்..
நிலா முற்றத்தில்..
நீ.. விரும்பும்
பாடலின் வரியில்.. - உன்
புன்னகையின் மிளிர்வு..

என்னைத் தூக்கி - உன்
அன்புக்குள் அடக்கிக் கொண்டு
நீ வெளியிட்ட பெரு மூச்சின்
அர்த்தம் புரியாமல் நான் விழித்தபோது
விடியலின் திசைகாட்டியது உன்
விழிகள்..

அந்த இரவுப்பொழுதின்
விடைபெறுதலில்..
வெளியே மழைமேகத்தின்
மின்னலினுடே
இதயத்துள் இடியை
இறக்கிக்கொண்டது பிரிவு..

விடியலின் பொழுதொன்றில்
என் சுவாசம் நிரப்பிய
காற்றின் வரிகளில்..
ஆரோ.. வெடித்துச் சிதறியதாய்
செய்திகள் இருந்தன.

உன் மௌனத்தின் இசையில்..
ஒரு தேசிய கீதத்தின் உயிர்ப்பு மட்டும்
வெளிச்சத்தில் தெரிந்தது

என் வாசலுக்கு
இனித் திரும்பாத உன் கால்கள்...
வந்த திசையில்
சூரியனின் எழுகை

ஒரு
கல்லறை செய்து
காற்றை அதில் நிரப்பட்டுமா.!.?
உந்தன் நினைவாக

ப்ரியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It