loversதேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை
நதியில் திளைத்துக்
குளிர்ந்த கூழாங்கல்லாய்
தண்ணென்ற பொழுதுகள்
உன்னோடு கழிபவை
உரையாடலில்லா நாட்களோ
மணல் சுடும் வெறுமை
பரிமாறலில் ஊறுகிற
உற்சாக ஊற்று சட்டென வடியும்
மவுனம்கவிந்த பொழுதுகள்
மனக்குகையில் வரைந்த
என் ஓவியங்களுக்கு
தேர்ந்த ரசிப்பை வழங்குமுன் விழிகள்
பாறையாயிருந்தேன்;
சிற்பமானேனுன் செதுக்கலில்
கைம்மாறுக்கு வாய்ப்பில்லா
கடன் பெற்ற நெஞ்சம்
உன் விசுவரூபத்தின்
முன் வாமனனாய்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை.

அன்பாதவன், மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It