
அலை நீளத்தில்
இரு கண்கள் கவிழ்த்த
கூடாரத்தினுள் கோழிகுஞ்சாய்
மனம் சிக்கிகொண்ட
ஒரு பிற்பகலை நம்மிடம்
எடுத்து வந்தது
எது அது!
இரு விரல் உரசி
இரு தோள் உரசி
உன்னருகில் அமர
ஒரு வேண்டுகோளாய் என்
தைரியம் தரையிறங்கியபோது
ஒற்றை பார்வையால்
என்மேல் ஒட்ட வைத்தாயே
எது அது!
தோழனாய், தமயனாய்
தொடரும் பயணத்தில்
துணைவனாய்
உன் கருவறையில் சூல்கொண்டு
பின்னொரு நாளில் நீ மடிதாலாட்டும்
தலை மகனாய்
எல்லா விருப்பத்திலும் உன்
அருகாமை விரும்பும்
எனக்குள் இருக்கும்
எது அது!
- பாஷா (