
இந்த சூதாட்டத்தில் அரிந்து கொடுத்தாயிற்று
உயிர் பருகத்தந்த பாகங்களை
காவலிருந்த கருவறைகளை
சுரக்கத் துவங்காத விரைப்பைகளை
தாள இயலாததாய் இருப்பது
துரோகத்தின் துயர் மிகு தீவதைகளை
இறையாண்மையின் பெயரால்
பிள்ளைக்கறி தின்னும் நீதி தேவதைகளை
துப்பாக்கிகள் தாழ்ந்தும் அகதிகள்
கைதிகளாவதை
ஒரு அபத்தமாக
ஒரு முடிந்த கொடுங்கனவாக
ஒரு பைத்தியக்காரனின் திமிராக
நசியத் துவங்கும் நம்பிக்கைகள்
மாற்ற துவங்குவதை......
- நேசமித்ரன்