உன்னை நினைப்பது
எவ்வளவு அழகாயிருக்கிறது

வெற்றிச்செய்திகளுக்கும்
மத்தியில் சிறையிலிருந்து கொண்டு
நாற்பது அகவை கடக்கையில்.
உன்னை நினைப்பது
எவ்வளவு அழகாயிருக்கிறது
உனது கைகள் நீலத்துணியில்
சாய்ந்திருக்க
உனது கேசம் வளமும்
மென்மையுமான வனப்பில்
எனது நேசமிகு இஸ்தான்புல் போலிருக்க
உன்னை நேசிக்கும் இன்பம்
இரண்டாம் மனிதன் போலிருக்கிறது.
மூலம்: Nazim Hikmath
புதுவை ஞானம் (j.p.pandit@gmail.com )