தேன்பருகித்
தாவிவிடும் வண்டதின்
இயல்பு விளங்காமல்
வினவும் பதினாரு வயது
பருவப்பூவிற்கு
நினைவடுக்குகளில் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சிதறிக்கிடக்கும்
வாழ்க்கைப்பாடங்களைக்
கோர்வையாய் சேர்த்துப்
பழகிடாத நிலையில்
விளக்கிச்சொல்லுவது எப்படியெனும்போதும்,
கட்டில் அடங்காத மனக்குரங்கை
அதன் போக்கில் விட்டு,
இன்றைய பொழுது
நம்பொழுது,
நாளையென்பது
பகல் கனவென்று,
காரணம் சொல்லி
சிற்றின்பங்களைக் கணக்கெடுக்கும்
இளந்தளிர்களுக்கு
வாழ்க்கையென்பது என்னவென்று
விளக்கிச்சொல்லுவது எப்படியெனும்போதும்,
இப்படி
பல்வேறு தருணங்களில்
கடந்து வந்த பாதைகளில்
கடந்து போன பாடங்களை
மீண்டும் படிக்க நேர்கையில்
தோன்றுகிறது,
நம் வாழ்க்கையைக்
குறிப்பெழுதியிருக்கலாமென்று...
- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட். (ashwin_
கீற்றில் தேட...
குறிப்பெழுதுங்கள்
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்