அகல் விளக்கில்
ஊற்றிய நெய்
கொஞ்சம் கொஞ்சமாகத்
தீர்ந்து கொண்டிருக்கிறது!
வீடெங்கும்
வெளிச்சம் தந்த தீபம்
மெல்ல மெல்ல
மங்கலாகி முற்றிலும்
அணைந்து விட்டது!
விம்மி அழுதாலும்
ஊர்கூடித் தொழுதாலும்
காற்றில் கரைந்த தீபம் - இனி
யார் கண்களுக்கும்
தெரியப் போவதில்லை!
விளக்கில்
ஏற்றப்பட்ட தீபம்
நெய் தீரும் போது
அணைந்து போகும்
என்பதை மனம்தான்
ஏற்க மறுக்கின்றது!
- கு.சிதம்பரம், சென்னை