சுவாசமற்ற பகல்பொழுதுகளின்
மௌனங்களைச் சுமந்த இலைகள்
சுருங்கிப் போகின்றன இரவில்
ஆனாலும்
அடுத்த பகல்பொழுதைக் கழிக்க
இரவின் சுவாசத்தை இனிமையாக்கி
தனக்கான ஓய்வை
அணு அணுவாய் ரசித்தபடி
உறங்குகின்றன
கிளையின் மடியில்.

- குளோரிசக்தி, கரூர்

Pin It