எல்லாத் துயரங்களையும்
கொஞ்சநேரம்
தனிமையின்
பரணிலிட்டு
இந்த நிலவொளியில் அமர்கிறேன்
ஆறுதலுரைக்கும் இரவின் சொற்களை மடியேந்த..
கடன் நிலுவையின் பாரத்தை
நோய்மையுற்றலின் மனவலியை
பணிச்சுமையின் ஆக்கிரமிப்பை
உறவுகள் தரும் துயரத்தையென
பரணிலிட்டவற்றின் பட்டியலை அடுக்கதலிலிருந்தும் சற்று இளைப்பாற
தேநீரின் ஆவியேறும் காற்றை
உள்ளிழுத்துக் காத்திருக்குமென்
கவனத்தில் புதிதாய் ஒரு சுமை சேர்க்கும் ஆவலில் எங்கோ தொலைதூரத்தில்
இருளை நீந்தியபடி
ஒலிக்கிறது
இணையைக் காணாத பறவையின்
இடைவிடாத ஓலம்.
- ந.சிவநேசன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்