கீற்றில் தேட...

நிறைவேறாத
தன் கனவுகளை
ஊன்றிக் காத்திருக்கிறான்
நீண்ட நாட்களாய்
தன் கனவு மரங்களில்
அமர்ந்த பறவைகளை
கல்லெறிந்து
துரத்தி
தனக்கான கனவுகளை
அந்தப் பறவையோடு
கடத்தி பறக்க விடுகிறான்
மீண்டும் அதே இறகுடன்
கூடு திரும்பும் பறவை
கனவுச் சிறகுகளை
உதிர்க்கிறது

- ப.தனஞ்ஜெயன்