உரையாடல்களை நெருக்கமாய்
பின் தொடருகிறது மௌனம்...
மௌனங்களின்
காலத்தில்
என்னை நீயும்
உன்னை நானும்
தேடித் திரிகிறோம்...
மௌனம் காட்டும்
நீயும் நானும்
உன்னையும் என்னையும்
போன்று இருப்பதில்லை...
நம்மைப் போலல்லாத
நீயும் நானும் கூட
பேசிக் கொண்டிருக்கனவாம்
நாம் அவர்களைப்
போன்று இல்லையென்று...

- அருணா சுப்ரமணியன்

Pin It