அதிகாலை பொழுதிலும்
அந்திசாய்ந்த வேலையிலும்
நடையாய் நடக்கிறார்கள்.
ஒரு சிலரின் கையில் கம்பு
சிலரின் கையில் நாய்க்குட்டி
என அவரவர் விருப்பத்திற்கேற்ப
பிடிமானங்களுடன்
நடையாய் நடக்கிறார்கள்.
பெண்களின் பின்சரியும்
ஜடையைப்போல
முன்சரிந்த வயிறுகளைச் சுமந்தவாறு
நடக்கும் ஆண்களைப் பார்க்கையில்
வினோதமாயிருக்கிறது.
சர்க்கரை குறைக்க
கொழுப்பு குறைக்க
ரத்த அழுத்தம் குறைக்க என
அதிகரித்ததை குறைக்க
பெருங்கவலையோடு
நடக்கிறார்கள்.
அவர்களின் பின்னே
கையேந்தி யாசகம் கேட்டு
சுற்றிவருபவனின்
விலா எலும்புகளை
முறைத்துப் பார்க்கின்றன
நடைபயில்பவர்களின்
பிடியில் உள்ள நாய்கள்.
குறைத்தலாய் விரட்டுகின்றன குரல்கள்
" சில்லரை இல்லை போ"
- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- ப.கவிதா குமார்
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post