பல இரவுகளை
கதவுகளுக்குள் ஒளித்து வைத்திருக்கும்
வீடுகளின் பகல்கள் குறித்து
பேசிக்கொண்டிருக்கின்றன குருவிகள்
அலகுகளில் உமிழப்படும்
ரகசியங்களின் ஒலிக்குறிப்புகள்
இலைகளால் உறிஞ்சப்படுகின்றன
அடம்பிடிக்கும் இரை
நழுவும் கணத்தில்
திமிறும் பசி
கொலை செய்யத் தயாராவதை
புதிதாகக் கண்ட குருவிகள்
காய்ச்சலில் ஒடுங்கியிருந்தன
அலகும் மீனும்
ஒன்றையொன்று கவ்வி உண்ணும்
வினோத வயலில்
கால் நனைத்த குருவிகள்
தீக்காயங்களுக்கு
மருந்திட்டு முனக ஆரம்பித்தன
உதிர்ந்த இறகு
ஒரு வீட்டின் படுக்கையறை ஜன்னலில்
எரிந்து சுழலத் தொடங்கிய கதையை
கீச்சிட்ட குருவியின் அலகை
இலைகளால் மூடின
மற்ற குருவிகள்
குருவிகளின் கண்கள் நல்லவை
எதையும் பெரிது படுத்தாதவை
என
வீடுகளின் பகல்கள்
ஒளித்துவைக்கும் இரவுகளிடம்
மீண்டும் சொல்ல ஆரம்பித்தன.
- இரா.கவியரசு
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- இரா.கவியரசு
- பிரிவு: கவிதைகள்