மரணப்படுக்கையில் மறக்காமல்
சொல்ல வேண்டும்
முன்பொரு முறை மரணித்ததை
*
வல்லவனுக்கு மறதி வந்தபோது
வாசுகியை வாசகியாக
நினைத்திருப்பான்
*
அந்தக் கைகளை
இன்று வரை தெரியவில்லை
அந்தப் போர்வைக்குள்
நாங்கள் மூவர் இருந்தோம்
*
கட்டாந்தரை தான் கவி பாடும்
பருப்புச் சட்டி இல்லை
கம்பன் பொண்டாட்டி புலம்பல்
*
எல்லாரும் சொல்லி அழுவது போலில்லை
இரண்டு ரூபாய்க்கு
அடி வெளுத்தவர்தான் தாத்தா
*
விழுந்து புரண்டு உருண்டு
நன்றாக இருக்கிறது
கல்லாக இருப்பது
*
கடலாவது எப்படியோ
கரையாவதும் அப்படித்தான்
சிலையாகிப் பார்
*
தீர்த்தக்கரை மலையடியில்
தெற்கு மூலையில் கொட்டும் அருவி
பார் அவனை பாரதி சாயல்
*
மரணிப்பதைத் தவிர
இதழ் முத்தம் பிடித்திருக்கிறது
இளையராஜா இசையும்
புன்னகை மன்னனுக்குத்தான்
எத்தனை டேக்....
- கவிஜி