பழைய வீடு தான்
பாழடைந்ததாக
காரணம் காட்டி
ஒழித்ததென்னவோ
பரண்மேலுள்ள
இறந்த தாத்தாவின்
நசுங்கிய குவளைகள்
ஓரங்கட்டப்பட்ட
தென்னவோ
இருக்கும் பாட்டியின்
குவளைக்குள்
நசுக்கிய நினைவுகள்
துந்தடைந்த
தென்னவோ
பின்புற கிணறு
தூர்வாரியதென்னவோ
தெருவோர
திண்ணையையும்
துணைக்கிருந்த
தென்னையும்
முடிந்தளவு
ஒழித்ததில்
ஒழிக்கபட்டிருந்தது
ஓரங்கட்டப்பட்டிருந்த
பாட்டியும் !
இறுதியாக
ஏதோவொரு
மூலையில்
தொங்கிக்
கொண்டிருக்கிறது
தானும்
துரத்தப்படுவோம்
என்றறியாத
குருவிகூடும்
தேன்கூடும்.......
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- சாதித்தார் ஸ்டாலின்! இது சொல்லாட்சியல்ல, செயலாட்சி!
- முனீஸ்வரன்
- அன்னை நாகம்மையார்: பெரியாரின் மனைமாட்சி
- ரிசல்ட் வரும் நாள்
- நதியைக் கொன்றவர்கள்
- நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 11, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன
- விவரங்கள்
- மு.கௌந்தி
- பிரிவு: கவிதைகள்