ஜன்னத்துக்காக 
அல்லாகு அக்பரென்று
சொல்லித்தான் 
வெடி வைத்தார்கள்
அவர்கள்...

அல்லாகு அக்பரென்று 
சொல்லித்தான் 
சிதறி மொளத்தானார்கள்
இவர்கள்....

வைத்தவனும்
அல்லாவை அழைத்தான்
சிதறி போனவனும் 
அல்லாவை அழைத்தான்...

எல்லாவற்றையும் வெறுமனே
பார்த்துக்கொண்டேயிருக்கிறான் அவன்...

அல்லா யாருக்கு தருவான் 
ஜன்னத்துக்கான நுழைவட்டை
அல்லாகு அக்பர்....

- அ.கரீம்

Pin It