tree without leafsமுறிந்துபோன கிளையொன்று
கோடாலியாக
மாறிய கதைக்குள்
மரமிழந்த வேர்கள்
மீண்டும் பூக்கத்
தொடங்கிய நாட்களில்
முளைத்து வளர்ந்தன
இன்னும் சில கோடாரிகள்,
மர நுனிகளில்...
சாலையோரத்
திண்ணையொன்றை
மொய்த்துக் கொண்டிருந்த
சிற்றெறும்புக் குவியலொன்று
பெருங்காற்றடிக்கப்
பறந்து போனதில்
மீண்டும் தனிமையாகிப்
போனது திண்ணை...
பெருமழையின் மின்னலொன்று
பட்டென்று தாக்க
நெருப்புக் குவியலுக்குள்
சிக்கிக் கொண்டு
கருகிப் போனது
கோடாரி பூத்த
மர நுனிகளும்
அதன் வேர்களை
மொய்த்துக் கொண்டிருந்த
சிற்றெறும்புகளும்...

- கிருத்திகா தாஸ்

Pin It