காலஞ்சென்ற முனியப்பன்
மச்சி வீட்டு குருவம்மா உடலில்
பேயாய் வந்து ஆடுவதாய்
வைத்தியம் பார்க்க
மலையக தேசத்திலிருந்து
நம்பூதிரியொருத்தரை
அழைத்து வந்தார்கள்
அவரும் ஓம் ஜீம் பூம்பென
ஐந்தாறு மந்திரங்கள் சொல்லி
நாடியதைக் கேட்டு வாங்கி
ஆகாயத்துக்குள் அடங்கிப் போவென்ற
அவருக்கும்
பேய்க்குமான ஒப்பந்தத்தில்
சரியென்ற பேய்
தனது நாட்டங்களை
வரிசைப்படுத்தலானது
ஒரு பாட்டில்
பட்டைச் சாராயமும்
சுருட்டுக் கட்டு ஒன்றும்
ஐந்தாறு நாட்டுக் கோழி முட்டையும்
பின்னர்
அவித்த மாட்டுக் கறி
அரைக் கிலோவும்....
பேய் அப்படியே கிடந்து
நம்பூதிரி மட்டும்
ஓடிப் போனதாக
ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Pin It