எதார்த்தமாய்
குறிவைத்து
வீசியெறிந்த கல்லில்
துடிதுடித்து
இறந்தது
குருவியொன்று.
இப்போதெல்லாம்
எங்கேயேனும்
குருவிகளின்
சப்தங்களை
கேட்கும்போது
சாபமிடுவது போலவே
இருக்கிறது
என்னை.
- கி.சார்லஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)