பாட்டி

man 246பின்வாசல்
கடந்த முன்னிரவில்,
நொடிக்குள் ஏதோ
கடந்து போனதாக பாட்டி
சொன்ன கதையை
பாட்டி இறந்த
அன்றுதான் நம்பினேன்...
-------------------------------------------------
ஓவியப் பெண்...

பெருமழை ரசித்த
தனிமைக்குள்
சுவரோரம் ஒதுங்கிய
பேரழகியாய்
நிர்வாணத் துளிகளால்
கரைந்து கொண்டிருந்தாள்
குடையோடு
நின்ற ஓவியப் பெண்...
------------------------------------------------
பொம்மலாட்டம்

அவரைப் போல
பார்த்தேன்
இவரைப் போல
சிரித்தேன்
அவரைப் போல
நடந்தேன்
இவரைப் போல
கிடந்தேன்
அவராகிப் பின்
இவராகி
கடைசியில் அவரைப்
போலவோ இவரைப்
போலவோ மரித்தேன்
முண்டம் திரும்பும்
கணத்தில் தலை
திரும்பாத பொம்மலாட்ட
நாடகத்தில்
கயிறுகள் அவரிடமோ..
அல்லது
இவரிடமோ...
--------------------------------------------

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.