*
பனிக்காலம் தொடங்கியபோது
அசைவற்று உறைந்தன சிறகுகள்
நேற்றிரவோடு
உறைபனி முடிந்தது
கனப்படுப்பருகே
பத்திரப்படுத்தி வைத்திருந்த
கடைசி உரையாடல்கள்
தத்தம் பச்சைமை இழந்து சருகாய் மாறி பழுப்பேறி
மொடமொடக்கின்றன
ஜன்னல் வழியே அவைகளை
காற்றிலனுப்புகிறேன்
சருகின் கனம் தாளாது
உறைந்த சிறகுகள் உடைகின்றன
அதன் சில்லுகளை
வழி நெடுகத் தூவியபடி
பாதை முடிவில்
உன் கதவை வந்தடைகிறேன்
சாத்திய கதவின் மீது
சிறகில்லா பறவை
இன்னும் உறையாமல்
கைப்பிடி வளையத்தில் உட்கார்ந்திருக்கிறது
*****
-- இளங்கோ (
கீற்றில் தேட...
வழி நெடுகத் தூவப்படும் சில்லுகள்..
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்