*
பனிக்காலம் தொடங்கியபோது
அசைவற்று உறைந்தன சிறகுகள்
நேற்றிரவோடு
உறைபனி முடிந்தது
கனப்படுப்பருகே
பத்திரப்படுத்தி வைத்திருந்த
கடைசி உரையாடல்கள்
தத்தம் பச்சைமை இழந்து சருகாய் மாறி பழுப்பேறி
மொடமொடக்கின்றன
ஜன்னல் வழியே அவைகளை
காற்றிலனுப்புகிறேன்
சருகின் கனம் தாளாது
உறைந்த சிறகுகள் உடைகின்றன
அதன் சில்லுகளை
வழி நெடுகத் தூவியபடி
பாதை முடிவில்
உன் கதவை வந்தடைகிறேன்
சாத்திய கதவின் மீது
சிறகில்லா பறவை
இன்னும் உறையாமல்
கைப்பிடி வளையத்தில் உட்கார்ந்திருக்கிறது
*****
-- இளங்கோ (
வழி நெடுகத் தூவப்படும் சில்லுகள்..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.