*
நடமாட்டமற்ற
ஒரு சாலை
வெயில் சுமந்துக் காத்திருக்கிறது
யாரேனும் வந்து போவதற்கு
மரங்களே இல்லாத
விளக்குக் கம்பங்கள் மட்டுமே
நிற்கும்
அத்தனிமையை
சிறகு விரித்துத் துரத்தும்
தன் நிழலைக் கண்ணுற்றபடி வட்டமிடுகிறது
அதே காத்திருத்தலோடு
மேலே ஒரு வல்லூறு
*****
-- இளங்கோ (