கீற்றில் தேட...

*
நடமாட்டமற்ற
ஒரு சாலை
வெயில் சுமந்துக் காத்திருக்கிறது
யாரேனும் வந்து போவதற்கு

மரங்களே இல்லாத
விளக்குக் கம்பங்கள் மட்டுமே
நிற்கும்
அத்தனிமையை

சிறகு விரித்துத் துரத்தும்
தன் நிழலைக் கண்ணுற்றபடி வட்டமிடுகிறது
அதே காத்திருத்தலோடு
மேலே ஒரு வல்லூறு

*****

-- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )