பிரியங்கள் புனைந்து
சுமந்த கருக்கள்-அவைகளின்
கனவு விருட்சங்களில்
பிரியங்களின் வர்ணத்தை
தூரிகையில் துளைத்தெடுத்து
தங்களின் அடையாளத்தை
தேடிக்கொள்கின்றன.
வர்ணங்களின் பேதமை
அறியாத பிரியங்கள்
இன்னபிற கருக்களையும்
அவ்வாறே சுமப்பதில்
தங்களுக்கான வர்ணத்தின்
செறிவு பற்றி வினவ
ஆரம்பிக்கின்றன கருக்கள்.
வினவுகளின் ஆழம்
புரியாத பிரியங்களின்
வெற்றுப் பதில்களில்
தங்களுக்கான தடித்தத்
தோல்களை அறுத்தெறிந்து
இரத்தவழிதலில்
கருக்கள் தேடி அலைகின்றன
புது வர்ணங்களை.
- சோமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- சாதித்தார் ஸ்டாலின்! இது சொல்லாட்சியல்ல, செயலாட்சி!
- முனீஸ்வரன்
- அன்னை நாகம்மையார்: பெரியாரின் மனைமாட்சி
- ரிசல்ட் வரும் நாள்
- நதியைக் கொன்றவர்கள்
- நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 11, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன
- விவரங்கள்
- சோமா
- பிரிவு: கவிதைகள்