*
தீப்பிடித்து எரிகிறது
உன் தூரிகை
வர்ணங்கள் நெளியும் கேன்வாஸில்
தீட்டிக் கொண்டிருக்கிறாய்
இரவு பகல் மறந்து
நம் உரையாடலை
நிழல் வெளிச்சம் மாறி மாறிப்
படரும் மௌனச் சாயல் குழைகிறது என் முகத்தில்
தீண்டும் விரலின் நடுக்கத்தில்
எழுதுகிறாய் உதடுகளின் மீது
ஒரு
முத்தத்தை..
*****
--இளங்கோ (
கீற்றில் தேட...
தீண்டும் விரல்..
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்