* ஒற்றைப் புன்னகையின்
வளைவில்
கள்ளத்தனமாய்
எட்டிப் பார்க்கும்
பல்லில்
பதுக்கி வைத்திருக்கிறாய்
இந்தப் பகலை
பின்னிரவின்
அடர் நீலம் தோறும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
முளைக்கிறது
உன்
பிரியம்
****
-- இளங்கோ (
கீற்றில் தேட...
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்