காந்திதேசத்தில்
கருணைக்கு கதவடைப்பா...?
சனநாயக வல்லரசில்
சத்தியத்திற்கு சவக்குழியா...?
மனிதநேயத்திற்கு
மரணஅறிவிப்பா...?
இருபதாண்டுகாலங்கள்
இருண்ட நாட்களாய் உருண்டோடியும்
எஞ்சியுள்ள உயிரும் வேண்டுமா...?
நீதிதேவனின் நிழலும்கூட
தமிழனுக்கு நெருப்பாய்... ஏன்?
எம் சகோதரா
உன்னை உள்வாங்கியுள்ள
சிறைகம்பிகளுக்கும் நாங்கள்
சிம்மசொப்பனமாவோம்...
எம்
கழுத்தறுபட்டாலும்
உன் கைவிலங்கறுக்காமல்
ஓயமாட்டோம்...
சாவைக்கண்டு அஞ்சும் கூட்டமல்ல நாம்
சத்தியத்தைக் காத்திடவே போராட்டம்...
சத்தியம் சத்தியமாக வெல்லும்
சத்தியம் சத்தியமாக வென்றே தீரும்...
அரசே
எங்கள் உணர்வுகளை உணர்ந்து
எம் உறவுகளுக்கு உயிர்கொடு...
உன்
கோரப்பசிக்கு மூவரின் உயிர்தான் வேண்டுமானால்...
தொங்கட்டும் உனது தூக்குக்கயிறு...
மூன்றாய் அல்ல
ஆறரைக்கோடியாய்...
- வேங்கை.சு.செ.இப்ராஹீம்
this three persons if involved in that assasination even 1 percentage , they should be hanged
RSS feed for comments to this post