*
நீயொரு சமரச உடன்படிக்கையோடு
துயரத்தின் வாசலில்
உட்கார்ந்திருக்கிறாய்
நிலுவையில் இருக்கும் மௌனங்களை
பட்டியலிடுவதில் தொடர்கிறது
இந்த மாலையும்
அதன் தனிமைக் கோப்பையில்
ஊற்றப்படும் மதுவும்
நுரைத் தளும்ப பொங்கும்
பிழையின் நீர்மையில்
மையமிட்டுக் குமிழ்ந்து மொக்குடைகிறது
அத்துயரத்தின் வாசலில்
நிர்க்கதியாய் உன்
புன்னகை
****
- இளங்கோ (